20 ஆம் தேதி சசிகலாவை சந்திக்க திட்டம்: தங்க தமிழ்செல்வன் 

Asianet News Tamil  
Published : Sep 16, 2017, 01:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
20 ஆம் தேதி சசிகலாவை சந்திக்க திட்டம்: தங்க தமிழ்செல்வன் 

சுருக்கம்

Plan to meet Sasikala Thanga Thamilselvan

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை வரும் 20 ஆம் தேதி டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சந்திக்க உள்ளதாக எம்.எல்.ஏ. தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

கர்நாடக மாநிலம் குடகில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் பதவியில் இருந்து தாமாக விலக வேண்டும் என்று கூறினார்.

வரும் 20 ஆம் தேதி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

கர்நாடகாவின் குடகில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் டிடிவி தினகரனுடன் சசிகலாவை சந்திக்க உள்ளோம்.

சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கிய பிறகு, சசிகலாவை டிடிவி தினகரன் முதன் முறையாக சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!