திமுகவின் அடுத்த தலைவர் இவர்தான்… வைரலாகும் பழனி எம்.எல்.ஏவின் பேச்சு!!

By Narendran SFirst Published Jan 3, 2022, 3:53 PM IST
Highlights

கருணாநிதியைத் தொடர்ந்து திமுகவை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவது போல உதயநிதி ஸ்டாலின் தான் வரும் காலத்தில் திமுகவை வழிநடத்தத் தலைமை ஏற்பார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

கருணாநிதியைத் தொடர்ந்து திமுகவை மு.க.ஸ்டாலின் வழி நடத்துவது போல உதயநிதி ஸ்டாலின் தான் வரும் காலத்தில் திமுகவை வழிநடத்தத் தலைமை ஏற்பார் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். கடந்த 2019இல் நடைபெற்ற மக்களவை தேர்தல் சமயத்தில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தவர் உதயநிதி. அதன் பின்னர் அவருக்கு திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கிய உதயநிதிக்கு, கடந்த சட்டசபைத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் சுமார் 69 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் உதயநிதி மாபெரும் வெற்றி பெற்றார்.

சேப்பாக்கம் மட்டுமின்றி அந்த சமயத்தில் அவர் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். அந்த சமயத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் தொடங்கப்படாமல் இருப்பதை விமர்சித்து, ஒற்றை கல்லைக் காட்டி பிரசாரம் செய்தது, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தேர்தலுக்குப் பின்னர், மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக அமைச்சரவையில் உதயநிதிக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது, அவருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாகவே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அவரது நெருங்கி நண்பரான அமைச்சர் அன்பில் மகேஷ் இதை முன்மொழிய அமைச்சர்கள் மூர்த்தி, செஞ்சி மஸ்தான், எஸ்எஸ் சிவசங்கர் உள்ளிட்ட பலரும் வழிமொழிந்துள்ளனர்.

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு பேரூர் திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பலரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் மகனும் பழனி எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமார், கருணாநிதியைத் தொடர்ந்து திமுகவை எப்படி மு.க.ஸ்டாலின் வழி நடத்துகிறாரோ, அதேபோல உதயநிதி ஸ்டாலின் தான் வரும் காலத்தில் திமுகவை வழிநடத்தத் தலைமை ஏற்பார். அதை நாங்கள் கண்டிப்பாக ஏற்போம் என்று தெரிவித்தார். 

click me!