’தேனியில் என்னை எதிர்த்து டி.டி.வி. தினகரனே நின்றாலும் தோற்கடிப்பேன்’...ஓ.பி.எஸ். மகன் தெனாவட்டு...

By Muthurama LingamFirst Published Mar 22, 2019, 1:15 PM IST
Highlights

’தேனி தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் அல்ல. டி.டி.வி. தினகரனே போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவது உறுதி’ என்று மார்தட்டுகிறார் ஓ.பி.எஸ்.சின் புதல்வர் ரவீந்திரநாத் குமார்.


’தேனி தொகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் அல்ல. டி.டி.வி. தினகரனே போட்டியிட்டாலும் நான் வெற்றிபெறுவது உறுதி’ என்று மார்தட்டுகிறார் ஓ.பி.எஸ்.சின் புதல்வர் ரவீந்திரநாத் குமார்.

தேனி பாராளுமன்ற தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர்களின் 2-வது பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தேனி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி பகுதியில் தங்கத் தமிழ்ச்செல்வன் பெரும் செல்வாக்கு பெற்றவர் என்பதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் தேனி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகதோப்பில் உள்ள குலதெய்வமான பேச்சியம்மன் கோவிலுக்கு வந்தார். அங்கு தரிசனம் முடிந்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தரிசனம் செய்தார்.

அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,’’ தேனி தொகுதியில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேனி மட்டுமல்ல 40 எம்.பி. தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிபெறும். தங்கதமிழ்செல்வன் அ.ம.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தேனி தொகுதியைப் பொறுத்தவரை 
என்னை எதிர்த்து இங்கு  டிடிவி தினகரனே நின்றாலும் எங்களுக்கு கவலையில்லை. அவர்களைத் தோற்கடிக்கிற வேலையை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்றார் ரவீந்திரநாத்.

click me!