தெருதெருவாய் மக்களை சந்திக்க..... களத்தில் சும்ம்மா கில்லியாய் இறங்கிய ஒபிஎஸ்......!!!

Asianet News Tamil  
Published : Feb 08, 2017, 01:06 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
தெருதெருவாய் மக்களை சந்திக்க..... களத்தில் சும்ம்மா கில்லியாய் இறங்கிய ஒபிஎஸ்......!!!

சுருக்கம்

ஒபிஎஸ்   :

கனத்த இதயத்துடன்  நேற்று  இரவு , ஜெயலலிதாவின்  நினைவிடத்தில் சுமார் 35 நிமிடம் தொடர்ந்து தியானத்தில் ஈடுப்பட்டு   இருந்தார்  ஒ பி எஸ் . பின்னர் பெருமூச்சியுடன், தெளிவான  சிந்தனையுடன் செய்தியாளர்களை  சந்தித்த  முதல்வர்  ஒபிஎஸ், பல்வேறு உண்மைகளை    மனம் திறந்து பேசினார்.

ராஜினாமா  வாபஸ் :

இந்நிலையில்,  செய்தியாளர்களுக்கு   பேட்டி அளித்த  பின்னர், ஒபிஎஸ் அவர்களுக்கு,  மக்களின்  அதரவு தொடர்ந்து  அதிகரித்து வருகிறது. ஒரு சில  எம் எல் ஏக்களும் ஒ பிஎஸ் -கு , ஆதரவாக  களம்  இறங்க  தொடங்கியுள்ளனர்.  இதனை தொடர்ந்து பேசிய ஒ பிஎஸ், தொண்டர்களின்  ஆதரவும்  , மக்கள்  ஆதரவும்  இருக்கும் தருவாயில்,   விருப்பமே  இல்லாமல்  கட்டாயத்தின்  பேரில்   ராஜினாமா  செய்த தன்னுடைய  முதல்வர்  பதிவியை   திரும்ப  பெற  ஆளுநரை நேரில்  சந்தித்து , ராஜினாமாவை  திரும்ப  பெற  உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

வீதி வீதியாக, கிராமம் கிராமமாக ......!

மக்களின்  மீது  முழு  அக்கரை  கொண்ட  ஒபிஎஸ்,  இனி  தெரு தெருவாய்  கிராமம் கிராமமாய் , மக்களை  தேடி  சென்று , அவர்களுக்கு  தேவையானதை   செய்ய  தனக்கு   முழு  விருப்பம்  உள்ளதாக  தெரிவித்துள்ளார்.

உதாரணம் :

வர்தா புயலின்  போது, தானும்  களத்தில்  இறங்கி   சுத்தப்படுத்தியவர்  ஒபிஎஸ், அதே  வேளையில் கச்சா  எண்ணெய்  கடலில்  கொட்டிய  போதும்,  நேரில்  சென்று  ஆய்வு  பணிகளை  துரித படுத்தியவர் ஒபிஎஸ்  என்பது  குறிப்பிடத்தக்கது.

 

PREV
click me!

Recommended Stories

விஜய்க்கு 'கை' கொடுத்த ராகுல்.. கூட்டணிக்கு அச்சாரமா? பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன விளக்கம்!
அமமுக யாருடன் கூட்டணி?.. மதில் மேல் பூனையாக டிடிவி தினகரன்.. முக்கிய அறிவிப்பு!