ராஜினாமாவை வாபஸ் வாங்குகிறார் ஓ.பி.எஸ்.!!! சசிகலா முதல்வராவதில் சிக்கல்...

Asianet News Tamil  
Published : Feb 07, 2017, 10:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
ராஜினாமாவை வாபஸ் வாங்குகிறார் ஓ.பி.எஸ்.!!! சசிகலா முதல்வராவதில் சிக்கல்...

சுருக்கம்

ஜெயலலிதாவின் சமாதியில் திடீரென மவுன அஞ்சலி செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவை நேரடியாக எதிர்த்து விட்டார்.

அதற்காக மீண்டும் அவர் ஜெயலலிதாவின் பெயரை பயன்படுத்தி கொண்டார். ஜெயலலிதா தன் மனதில் வந்து சொன்னதால்தான் சசிகலாவை எதிர்பதாக தெரிவித்துள்ளார்.

நிருபர்கள் ராஜினாவை வாபஸ் வாங்குவீர்களா என கேட்டபோது எம்.எல்.ஏக்கள் மற்றும் மக்கள் விரும்பினால் நிச்சயம் வாபஸ் பெறுவேன்.

மேலும் தன்னை மிகவும் கட்டாயப்படுத்தி அவமானபடுத்தி விட்டார்கள் என தன் மனக்குமுறலை கொட்டினார் ஓ.பி.எஸ்.

அம்மாவின் ஆணைப்படி முதல்வரான என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

அரசியலை விட்டு விலகுவேன் என முதலில் சொன்ன பன்னீர்செல்வம்  தற்போது தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக முடிவு எடுத்ததால்  சசிகலா பதவி ஏற்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இன்னும் சொல்லபோனால் சசிகலா முதல்வராவதே கடினம் என்கின்றனர் அரசியல் வல்லுனர்கள்.

PREV
click me!

Recommended Stories

திமுகவின் 164 பிளான்.. கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சீட்? உத்தேச பட்டியல் இதோ!
காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கைகாட்டுபவரே முதல்வர்..! ராகுல் காந்தியின் மாஸ்டர் ப்ளான்..! கதிகலங்கும் கதர் சட்டைகள்..!