#BREAKING ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் பெற நாளை கடைசி நாளா?... உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் அதிரடி உத்தரவு!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jun 24, 2021, 10:05 AM ISTUpdated : Jun 25, 2021, 04:17 PM IST
#BREAKING ரேஷன் கடைகளில் ரூ.2 ஆயிரம் பெற நாளை கடைசி நாளா?... உணவு பொருள் வழங்கல் துறை ஆணையர் அதிரடி உத்தரவு!

சுருக்கம்

ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2000 மற்றும் 14 மலீகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஜூன் 25க்குள் வழங்க வேண்டும் என கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது

கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்கும் விதமாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் மூலம் 2 கோடியே 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. 

கடந்த மாதம் முதற்கட்டமாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2ம் தவணையாக ரூ2 ஆயிரம், கொரோனா சிறப்பு நிவாரணமாக 14 வகை மளிகை பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.  இதற்கான டோக்கன் கடந்த 11ம் தேதி முதல் வீடு, வீடாக வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 15ம் தேதி முதல் இலவச மளிகை பொருட்கள் மற்றும் ரூ2 ஆயிரம் வழங்கும் பணி ரேஷன் கடைகளில் தொடங்கியது. 

ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் இதுவரை மொத்தம் 47.16 சதவீதம் பேருக்கு இலவச மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை ஜூன் 25க்குள் வழங்க வேண்டும் என கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான சுற்றறிக்கையும் அனைத்து மாவட்ட உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கொரோனா 2ம் கட்ட நிவாரணமாக வழங்கப்படும் ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதற்கு எந்த கால அவகாசமும் விதிக்கப்படவில்லை என்றும் உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது மக்களிடையே பெரும் குழப்பத்தை உருவாக்கிய நிலையில் அதற்கு தீர்வளிக்கும் விதமாக, நாளைக்குள் விநியோகித்தை முடிக்க வேண்டுமென மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

எடப்பாடி பழனிசாமி ரொம்ப நேர்மையானவர்.. திமுக அரசே சர்டிபிகேட் கொடுத்துடுச்சு..! ஆர்ப்பரிக்கும் அதிமுக..!
நான் தவிர்த்த நூல் ஒன்று உள்ளது... அது ‘பூணூல்’..! ஐயங்கார் வீட்டில் பிறந்த கமலின் சமத்துவம்