சசிகலா பரோலில் வெளிவருகிறாரா? - 'இல்லவே இல்லை' என மறுக்கும் சிறைத்துறை!!

First Published Jun 5, 2017, 5:15 PM IST
Highlights
no parole for sasikala


சசிகலா பரோலில் வெளிவரவுள்ளதாக பரவி வரும் தகவல் தவறானது என சிறைத்துறை வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்துள்ளன.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதையடுத்து, தனது அக்காள் மகனான டி.டி.வி.தினகரனை, அதிமுகவின் துணைப் பொதுச் செயராளராக நியமித்துவிட்டு சிறை சென்றுவிட்டார்.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடக்க முயன்ற வழக்கில் தினகரன் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு நேற்று முன்தினம் ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று தினகரன் கூறி வருகிறார். இதையடுத்து தனது அடுத்த  கட்ட நடவடிக்கை குறித்து சசிகலாவிடம் ஆலோசிப்பதற்காக இன்று பெங்களூரு சிறைக்கு தினகரன் சென்றுள்ளார்.

இதனிடையே சிறையில் உள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைணை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா? இல்லையா என்பது குறித்து இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெய ஆனந்த்துக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திவாகரன் செய்து வருகிறார்.

இந்த திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, சசிகலா மன்னார்குடிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. சிறையிலிருந்து சசிகலா  பபேராலில் வெளிவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளபடுவதாகவும் தகவல் பரப்பட்டன.

இந்நிலையில், சசிகலா பரோலில் வெளிவருவதாக பரப்பப்படும் தகவல் தவறானது என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், 6 மாத காலம் சிறை தண்டனை முடிவடைந்தால் மட்டுமே பரோல் கிடைக்கும் எனவும் தற்போது இந்த சூழல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!