இனி அரசு மருத்துவமனைகள் தனியார் கையில்..?? புள்ளிவிவரத்துடன் பகீர் கிளப்பும் டாக்டர் ரவீந்திரநாத்...!!

By Ezhilarasan BabuFirst Published Jan 11, 2020, 3:58 PM IST
Highlights

கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது. என்றும்  மருத்துவப் பணிநியமன ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 

கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிக்கக் கூடாது.என்றும்  மருத்துவப் பணிநியமன ஆணையத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு உடனடியாக பணி நியமனம் வழங்கி, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இது குறித்து சென்னை பத்திரிக்கையாளர்  மன்றத்தில் செய்தியாளர்களை  சந்தித்த , இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,  தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன.

 இந்த இடங்களை தமிழக அரசு , நிதி அயோக்கின் வற்புறுத்தலால்,கௌரவ மருத்துவர்கள் மூலம் நிரப்ப  உள்ளது.  11.12.2019  ஆம் நாளிட்ட தமிழக அரசின் சுற்றறிக்கையில் இதை உறுதி செய்வதாக உள்ளது. கௌரவ அடிப்படையில் மருத்துவர்களை நியமிப்பது,  கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள உதவி மருத்துவர்களுக்கான (Assistant Sugeon -General) 1884 காலிப்பணியிடங்களை  MRB தேர்வு மூலமாக நிரப்பிட ,டிசம்பர் 2018 (9.12.2018 )-ல்  எழுத்துத்தேர்வு நடத்தியது. அதன் மூலம் , 856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1028 பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை.அவர்களின் இடங்கள் காலியாக உள்ளன. 

அந்த காலிப்பணியிடங்களை, எம்ஆர்பி  தேர்வில் வெற்றி பெற்றவர்களை ,அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் உடனடியாக நியமிக்க வேண்டும். அதை விடுத்து, மருத்துவர்களை ஒப்பந்த அடிப்படையிலோ,கௌரவ அடிப்படையிலோ நியமிக்கக் கூடாது. அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு,கௌரவப் பேராசிரியர்களை பணிநியமனம் செய்து கொள்ளவும், அவ்வாறு நியமிக்கப்பட உள்ள   மருத்துவர்களுக்கு, ஊதியம்  நிர்ணயித்து வழங்கிடவும் , மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு  வற்புறுத்துகிறது. வெளிநாட்டினரையும், வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணிநியமனம் செய்ய தமிழக அரசு முயல்கிறது. 

இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். எனவே, இம் முயற்சியையும் கைவிட வேண்டும். நிதி அயோக், மாவட்ட மருத்துவ மனைகளை,பொது தனியார் பங்களிப்பின் அடிப்படையில் (PPP model), மருத்துவக் கல்லூரிகளை தனியார் தொடங்கிட, வழங்கிட வேண்டும் என மாநில அரசுகளை நிரபந்தித்து வருகிறது. அது தொடர்பாக வரும் ஜனவரி 21 அன்று டெல்லியில் நிதி அயோக் ஒரு கூட்டத்தை நடத்த உள்ளது. நிதி அயோக்கின் நிர்பந்தங்களுக்கு தமிழக அரசு அடிபணிந்து வருவது கவலை அளிக்கிறது.மாவட்ட மருத்துவமனைகள் தனியார் மயமானால், அது இளம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். அது பொது சுகாதாரத்துறையை வலுவிலக்கச் செய்துவிடும். 

அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.எனவே, இத்தகைய தனியார் மயமாக்கும் முயற்சிகளையும் , நிதி அயோகும், மத்திய மாநில அரசுகளும் கைவிட வேண்டும். என ரவீந்தரநாத் தெரிவித்துள்ளார்.  அவருடன் அச் சங்கத்தின் செயலாளர் டாக்டர்.ஏ.ஆர்.சாந்தி, உடன் இருந்தார்.  
 

click me!