
கோவை மாவட்டத்தில் கட்சியை வளர்த்தெடுக்க அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவைப் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது திமுக. அமைச்சர் செந்தில் பாலாஜி வாட்ஸ்-அப் குழு ஒன்றை ஆரம்பித்து இருக்கிறார். வாரத்தில் சில நாட்கள் கோவைக்கு வந்து அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் ஊரில் இல்லாத போது கோவை நிலவரங்களை தெரிந்து கொள்ள உள்ளூர் செய்தியாளர்களோட தொடர்பில் இருப்பதற்காக வாட்ஸ் ஆப் குழு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.
இதற்கு கரூரைச் சேர்ந்த தன் உதவியாளர் ஒருவரை அட்மினாக்கி இருக்கிறார். அமைச்சர் கோவையில் கலந்து கொள்கிற நிகழ்ச்சி விபரங்களை அந்தக் குழுவில் பதிவிடுகிறார்கள். அதே நேரம், இந்த குரூப்பில் உள்ளூர் கட்சி நிர்வாகிகள் யாரையும் சேர்க்கவில்லை.
இதையும் படியுங்கள்:- தமிழக பாதுகாப்பு பிரதமரின் கையில்..? "அஜித் தோவாலுடன் நேரடி தொடர்பில் டிஜிபி" பத்திரிக்கையாளர் பகீர்
பல முறை கோவைக்கு வந்துவிட்ட செந்தில் பாலாஜிக்கு முதல் சவாலாக இருப்பது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல். அதில் பெரும் வெற்றியைப் பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் செந்தில் பாலாஜி. கோவை மாவட்டத்தில் திமுக செல்வாக்கை உருவாக்கவேண்டிய கட்டத்தில் செந்தில் பாலாஜியும், அங்கு ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கை நிலைநிறுத்த அதிமுகவின் எஸ்.பி.வேலுமணியும் செய்யும் அரசியல் பரபரக்கத் தொடங்கி இருக்கிறது.
இதையும் படியுங்கள்:- திமுகவிற்கு இனி தேய்பிறை தான்.. ஸ்டாலினால் விடியல் தர முடியாது.. நத்தம் விசுவநாதன் சரவெடி.!
`கோவை மக்கள் சபை’ என்ற பெயரில், ஆங்காங்கே மக்களிடம் மனுக்கள் வாங்கத் தொடங்கிவிட்டார் செந்தில் பாலாஜி. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.
செந்தில் பாலாஜி வருகையால் அதிமுக உச்சகட்ட அலர்ட்டில் இருக்கிறது. சிறிய வாய்ப்புகூட கொடுத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர். சமீபத்தில் செந்தில் பாலாஜியும், எஸ்.பி.வேலுமணியும் ஒரே விமானத்தில் பயணித்து இருக்கின்றனர். வேலுமணி உடனடியாகத் தனது ஆதரவாளர்களுக்கு போன் போட்டு ஏராமானோரை வர வைத்து விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க வைத்து அதகளப்படுத்தி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: -கிரேட் சார்... கீழடியை சேர்ந்த நர்சுக்கு இங்கிலாந்தில் நைட்டிங்கேல் விருது..!
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், இரண்டு நாள் பயணமாக கோவைக்கு போய் வந்தார். முதல்வரை வரவேற்க ஒரு ஓட்டுச்சாவடிக்கு 40 பேர் வீதம், 2,500 ஓட்டுச்சாவடிக்கு ஒரு லட்சம் பேரை திரட்ட வேண்டும் என ஆளுங்கட்சியினர் திட்டம் போட்டு இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்த கூட்டம் வராததால், ஆளுங்கட்சியின் கோவை பொறுப்பாளர்கள் 'அப்செட்' ஆகி விட்டார்கள். இதனால், உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னால், சில நிர்வாகிகளை களையெடுக்கப்படலாம் என பேசிக் கொள்கிறார்கள். அதே நேரம் கோவையில் தி.மு.க., வேரூன்ற கூடாது என்று அ.தி.மு.க., தரப்பும் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்நிலையில், கோவை மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி பீளமேடு பகுதியில் உள்ள ஒரு வில்லாவில் குடியேறி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவையில் கட்சி பணிகளை விரைந்து உடனுக்குடன் முடிக்கவும், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும் கோவையிலேயே திமுக அமைச்சர் குடியேறிவிட்டாராம்.