நாளை இப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பு..!

By ezhil mozhiFirst Published Jul 1, 2019, 6:44 PM IST
Highlights

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று துறை மீதான மானிய கோரிக்கை வைக்கப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது.

நாளை இப்படி ஒரு அறிவிப்பு வர வாய்ப்பு..!

தமிழக சட்ட பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று துறை மீதான மானிய கோரிக்கை வைக்கப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை சில முக்கிய  கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு. அதன்  மீதான விவாதம் மற்றும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு  உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. 

அதன் படி, பிள்ளைகளைவித்துறை பற்றிய முக்கிய சில திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி, நாளை ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது வழங்கப்பட்ட தண்டனை அனைத்தும் ரத்து செய்வது குறித்தும், பள்ளிகளின் இணைப்பு பற்றி திட்டங்கள் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது.

மூன்று ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்க அறிவிப்பு வெளியாகவும், 

அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஜனவரி முதல் பயோமெட்ரிக் வருகைப்பதிவு குறித்த அறிவிப்பும், யோகா, கராத்தே, தனிநபர் விளையாட்டு என மாணவர்களுக்கு கால அட்டவணை மாற்றம் அறிவிப்பு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 

click me!