
டெல்லி தேர்தல் ஆணைய அலுவலக வளாகத்தில் காரை உள்ளே விட மறுத்ததால், மைத்ரேயன் எம்.பி. தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இதையடுதது, கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது. மைத்ரேயன் எம்.பி., தற்போது முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அணியில் இருந்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளுமே தங்கள் அணிகளுக்கு சாதகமாக ஆவணங்களை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்து வருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைத்ரேயன் எம்.பி., அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், தேர்தல் ஆணைய அலுவலகத்தின் எதிரே நாற்காலி ஒன்றில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.