எனக்கும் என் மனைவிக்கும் கடவுள் நம்பிக்கை கிடையாது..!! பாஜகவுக்கு பதிலடி கொடுத்த உதயநிதி..!!

By Ezhilarasan BabuFirst Published Aug 25, 2020, 10:05 AM IST
Highlights

எனக்கும் என் மனைவிக்கும் கடல் நம்பிக்கை கிடையாது, ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு, என்பதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. 

திமுக பகுத்தறிவு பேசி வரும் நிலையில் அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி  ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தங்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை புகைப்படம் எடுத்து பதிவு செய்திருந்த நிலையில், அதை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக உதயநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் முழு விவரம்:-

மத்திய பாசிச பாஜக மற்றும் மாநில அடிமை எடுபிடி அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளின் ஊழல் குறித்து நான் பகிரும் போது அவற்றை எடுத்து விவாதித்து பேசுபொருள் ஆகாதவர்கள், தற்போது பிள்ளையார் சிலையின் புகைப்படத்தை பகிர்ந்ததை பரபரப்பாகவிவாதிக்கிறார்கள். 

நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, அதையெல்லாம் விட்டுவிட்டு இதை பிடித்துக்கொண்டு வெவ்வேறு விதமாக கயிறு திரிப்பதை பார்க்கையில், இங்கு எது நடந்தாலும் அதை கழகத்துக்கு எதிரானதாக திசை திருப்பும் சந்தர்ப்பவாதிகளின் சதிவேலைகளை புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு விஷயத்தை இங்கே நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன், எனக்கும் என் மனைவிக்கும் கடல் நம்பிக்கை கிடையாது, ஆனால் என் தாயாருக்கு அந்த நம்பிக்கை உண்டு, என்பதை அனைவரும் அறிவர். எங்கள் வீட்டில் ஒரு பூஜை அறையும் உண்டு. அதில் எங்கள் மூதாதையர்களின் உருவப்படங்கள் உள்ளன மேலும் என் தாயார் நம்பும் சில கடவுள் படங்களும் உண்டு முக்கியமான முடிவு எடுக்கும் போது அங்குள்ள மூதாதையர்களின் படங்களின் முன் நின்று அவர்களை மனதில் நினைத்து விட்டு செய்வது எங்கள் வழக்கம்.

இந்நிலையில், பிள்ளையார் சதுர்த்திக்காக அம்மா ஒரு பிள்ளையார் சிலை வாங்கி இருந்தார், அந்த சிலையை நேற்று இரவு பார்த்த என் மகள் இந்த சிலையை எப்படி செய்வார்கள் என்று கேட்டார், இந்த சிலை  களிமண்ணில் செய்தது, தண்ணீரில் கரைக்க எடுத்து சென்று விடுவார்கள் என்றேன். இந்த சிலையை எதற்கு தண்ணீரில் போடணும் என்று கேட்டார். அதுதான் முறை என்கிறார்கள். அடுத்த வருஷத்துக்கு புதிதாக வேறு ஒன்று வாங்குவார்கள் என்றேன். கரைப்பதற்கு முன் இந்த சிலையுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொடுங்கள் என்று கேட்டார், அவரின் விருப்பத்தின் பேரில் நான்தான் அந்த புகைப்படத்தை எடுத்து என் மகள் ரசித்த அந்த சிலையை அவரின்  விருப்பத்திற்காக என் டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்தேன், அவ்வளவே... என உதயநிதி விளக்கம் அளித்துள்ளார்.

 

click me!