கொரோனா தொற்றால் பலியானவருக்கு இறுதி சடங்கு செய்த எம்எல்.ஏ.! விழிப்புணர்வுக்காக இப்படி செய்தாராம்.!

By T BalamurukanFirst Published Aug 17, 2020, 7:45 AM IST
Highlights

கொரோனா தொற்று இறந்தவரின் உடலை எம்எல்ஏ ஒருவர் அடக்கம் செய்த சம்பவம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.


கொரோனா தொற்று இறந்தவரின் உடலை எம்எல்ஏ ஒருவர் அடக்கம் செய்த சம்பவம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.கொரோனா தொற்றால் இறந்த டாக்டர்களை கூட பொதுமக்கள் பொதுவான மயானத்தில் அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவித்து வருந்தனர்.இந்த வரிசையில் நர்ஸ்கள் பொதுமக்கள் என இடம் பிடித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நேரத்தில் எம்எல்ஏ ஒருவர் கொரோனா பாதித்த ஒருவருக்கு காரியம் செய்திருப்பது உண்மையிலேயே பாராட்ட வேண்டிய விசயம். முறையாக செய்தால் எந்த பாதிப்பும் இல்லை என்று நிருபித்திருக்கிறார் அவர்.

திருப்பதியில் கொரோனா தொற்றுக்கு பெண் ஒருவர் பலியானார். அவரின் உடலுக்கு திருப்பதி கோவிந்ததாமத்தில் இறுதிச்சடங்கை திருப்பதி தொகுதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி நடத்தி வைத்தார். அவருடன் மாநகராட்சி கமிஷனர் கிரிஷா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
முன்னதாக கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றும்போது, ஆம்புலன்ஸ் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை ஊழியர்கள் தகுந்த பாதுகாப்பு கவச உடையணிந்து, பெண்ணின் உடலை ஆம்புலன்சில் ஏற்றிச் சென்றனர். கோவிந்ததாமத்தில் உடலை இறக்கி ஆம்புலன்ஸ் முழுவதும் மீண்டும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

அப்போது எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி பேசும் போது.., "கொரோனா தொற்றுக்கு இறந்தவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவ வாய்ப்பில்லை. எனவே இறந்தவர் உடலை உறவினர்கள் பெற்று இறதிச்சடங்கை நடத்தலாம். அதற்காகவே நாங்கள் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம், என்றார்.

click me!