
கோவை மாவட்டம் மேட்டுபாளையம் எம்எல்ஏ ஓ.கே.சின்ராஜ் விட்டால் போதும் என்று தப்பி வந்திருப்பதால் ஓபிஎஸ் தரப்பில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மதுரை மேற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், டீஷர்ட் பெர்முடாஸ் டிரவுசர் அணிந்து சுற்றுலா பயணி வேடமிட்டு தப்பி ஓடிவந்துள்ளார்.
அதே பாணியில் எம்எல்ஏ ஓ.கே.சின்ராஜும் கட்டம் போட்ட சட்டை மற்றும் பேன்ட் அணிந்து தப்பி ஓடி வந்திருக்கிறார்.
ஏதோ கொள்ளை கூட்டத்தை அடைத்து வைப்பது போல மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலா கும்பலிடமிருந்து தப்பி வருவது மிகுந்த வேதனை அளிக்க கூடிய விசயமாக மாறியுள்ளது.
இவ்வளவு எதிர்ப்புகள் கிளம்பியும் விடாது கருப்பு என்ற ரேஞ்சில் சசிகலாவும் இறுதி வரை போராடி பார்க்கிறார்,
இறுதி தீர்ப்பும் வழங்கப்பட்டு விட்டது இதனால் பெரும்பாலான எம்எல்ஏக்கள் அடியோடு ஆடி போயுள்ளனர்.
அந்த பீச் ரிசார்டிலிருந்து வெளியேறி விட்டால் போதும் 80% எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்சுடன் இணைய தயார உள்ளார்கள்.
ஆனால் தொடர்ந்து சசிகலா பேசி பேசியே தனது கட்டுபாட்டில் வைத்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க எந்த நிலையிலும் அதிவிரைவு அதிரடிப்படை ரிசார்டுக்குள் புகுந்து துவம்சம் செய்யவுள்ள நிலையில் தீர்ப்பு வெளியாகி கொண்டிருந்த பரபரப்பான வேளையில் அமைச்சர் செல்லூர் ராஜுவும் தப்பி ஓடி உள்ளார். இவ்வளவு இழப்பிற்கு பிறகும் எதை பற்றியும் கவலை படாமல் அசராமல் சசிகலா ஆலோசனை நடத்தி வருகிறார்.