சந்தோஷத்தின் உச்சத்தில் கிரீன்வேஸ் சாலை - வெறிச்சோடிப்போன போயஸ் இல்லம்

Asianet News Tamil  
Published : Feb 14, 2017, 11:44 AM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சந்தோஷத்தின் உச்சத்தில் கிரீன்வேஸ் சாலை - வெறிச்சோடிப்போன போயஸ் இல்லம்

சுருக்கம்

சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து முதல்வர் ஓபிஎஸ் இல்லம் சந்தோஷத்தின் உச்சத்திலும், போயஸ் இல்லம் வெறிச்சோடியும் கிடக்கிறது.

சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானதை அடுத்து சசிகலா , சுதாகரன் இளவரசி உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைதண்டனை உறுதியானது. இதையடுத்து சசிகலா வசிக்கும் போயஸ் இல்லத்தில் தொண்டர்கள் யாரும் இல்லாததால் வெறிச்சோடியது. நேற்றே தண்டனை கிடைக்கலாம் என்று கருதியதால் சசிகலா கூவத்தூர் புறப்பட்டு சென்றார்.

போயஸ் கார்டனில் இளவரசி உள்ளிட்டோர் இருந்தனர். தண்டனை கிடைத்ததை அடுத்து போயஸ் கார்டன் பக்கம் ஒரு ஈ , காக்கை இல்லாமல் வெறிச்சோடி போனது. மறுபுறம் ஓபிஎஸ் இல்லம் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாஅலை முழுதும் தொண்டர்கள் உற்சாகத்துடன் இனிப்புகளை வழங்கியும் , பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். 

PREV
click me!

Recommended Stories

திமுக-விடம் மன்னிப்பு கேட்ட விஜய்! தவெக அமைச்சர் செய்த தவறு! நடந்தது என்ன?
1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!