அமைச்சர்களின் திடீர் ஆலோசனைக்கு காரணம் இது தான்...!

 
Published : Apr 17, 2017, 11:47 PM ISTUpdated : Sep 19, 2018, 03:09 AM IST
அமைச்சர்களின் திடீர் ஆலோசனைக்கு  காரணம்  இது தான்...!

சுருக்கம்

ministers discussion regarding ops and sasikala

தமிழகத்தில்   பரபரப்பான  அரசியல்   சூழல்  நிலவி வருகிறது.பிளவுபட்ட  அதிமுகவின்  இரு கட்சிகளும்  ஒன்றிணைய  வாய்ப்புகள்   அதிகமாக உள்ளது .

இன்று காலை ஓ பன்னீர் செல்வம்  பேச்சுவார்த்தைக்கு  தயார்   என குறிப்பிட்டு இருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக ,  சசிகலா  தரப்பு அமைச்சர்களும்  பேச்சுவார்த்தைக்கு தயாராக   இருப்பதாக  தெரிவித்தனர்

இதனை  தொடர்ந்து  தற்போது   இருதரப்பு   அமைச்சர்களும்  திடீர்  ஆலோசனை மேற்கொண்டனர்

இந்த  ஆலோசனையில், முக்கிய  நிகழ்வாக  இரண்டு  காரணங்களை முன் வைத்து  விவாதம்   நடைபெற்றதாக  தெரிவித்தனர் .

1.கட்சியை  ஒற்றுமையாக   வழி நடத்துவது  குறித்து  பேச்சுவார்த்தை  நடைப் பெற்றதாக  அமைச்சர் ஜெயா குமார்    தெரிவித்தார்

 2இரட்டை இலை சின்னம் தொடர்பாக  தேர்தல் ஆணையத்தில்  சமர்பிக்கப்பட  வேண்டிய பிரமாண பத்திரம்  குறித்து விவாதித்ததாகவும் அமைச்சர்   ஜெயகுமார்  தெரிவித்தார்

மேலும்,பன்னீர்  செல்வம் அணியினருடன் ஆலோசனை நடத்த தயார்   என  அமைச்சர் ஜெயகுமார்  தெரிவித்தார்

 

PREV
click me!

Recommended Stories

ரூ.250 கோடி ஊழல்... சேகர்பாபு, மேயர் பிரியா, ஸ்டாலினுக்கு தூய்மை பணியாளர்கள் பகீர் எச்சரிக்கை..!
முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!