மு.க.ஸ்டாலின் ஒரு புழுகுமூட்டை… அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆங்காரம்..!

By Thiraviaraj RMFirst Published Mar 18, 2021, 4:32 PM IST
Highlights

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தில் தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். அவர்களால் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற முடிந்ததா?

முதல்வர் எடப்பாடியாரின் பலத்தை அதிகரிக்கும் வகையில், அமைச்சர் வேலுமணி கொங்கு பகுதியில் அதிரடிகளை நிகழ்த்தி வருகிறார். அந்த வகையில், கோவை சிங்காநல்லூர் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கே.ஆர்.ஜெயராமை அறிமுகப்படுத்தும் செயல்வீரர்கள் கூட்டம் வரதராஜபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.

அப்போது கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது, ‘’கடந்த 2016 தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும். 

ஏனென்றால் அந்த தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. எம்.எல்.ஏ. மக்கள் நல திட்டம் எதையும் நிறைவேற்றவில்லை. ஆனால் இந்த தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் தான் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தில் தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்கள் வெற்றி பெற்றார்கள். அவர்களால் எந்த திட்டத்தையாவது நிறைவேற்ற முடிந்ததா? எனவே தி.மு.க.வினரின் பொய்யான வாக்குறுதிகளை நம்பாமல் அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை வெற்றிப் பெற செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

click me!