பங்குனி, மாசி பிறந்தாலும் ஸ்டாலினுக்கு வழி பிறக்காது... திமுகவை கலாய்த்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!

By vinoth kumarFirst Published Jan 10, 2021, 9:47 AM IST
Highlights

தை அல்ல பங்குனியோ, மாசியோ பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு வழி எப்போதும் பிறக்காது. தை பிறந்தால் வழிபிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். 

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கொளத்தூர் தொகுதி மக்கள் மற்றும் திமுக  நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி கொளத்தூர் அகரம் சந்திப்பில் உள்ள தனியார் பள்ளி மற்றும் ஜிகேஎம் காலனியில் நேற்று நடந்தது. அப்போது, பேசிய மு.க.ஸ்டாலின் தை பிறந்தால் வழிப் பிறக்கும் என்பதுபோல தமிழ்நாட்டிற்கும் 4 மாத்தில் வழிப் பிறக்கப் போவதாக தெரிவித்தார். 

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்;- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைக்கு முதல் பரிசாக தலா ஒரு கார் வழங்கப்படும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர், துணை முதல்வர் தொடங்கி வைப்பார்கள்; சிறந்த வீரர் மற்றும் காளைக்கு அவர்கள் காரை பரிசாக வழங்குவார்கள். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு பிடி வீரர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். மாஸ்க் அணிந்திருந்தால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். 

மேலும் பேசிய அவர், தை அல்ல பங்குனியோ, மாசியோ பிறந்தாலும் திமுக ஆட்சிக்கு வராது. ஸ்டாலினுக்கு வழி எப்போதும் பிறக்காது. தை பிறந்தால் வழிபிறக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவது குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

click me!