எடப்பாடி ஒரு ’போலி பச்சைதுண்டு’.. அரைவேக்காட்டு மாதிரி தான் பேசுறாரு..கடுமையாக சாடிய எம்.ஆர்.கே..

Published : Mar 20, 2022, 08:00 PM IST
எடப்பாடி ஒரு ’போலி பச்சைதுண்டு’.. அரைவேக்காட்டு மாதிரி தான் பேசுறாரு..கடுமையாக சாடிய எம்.ஆர்.கே..

சுருக்கம்

“தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர் அறிக்கை விடுவதும், பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது என்று வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சாடியுள்ளார். 

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,  உழவர் பெருங்குடி மக்களே பாராட்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையைக் கொச்சைப்படுத்தி, ஆளுங்கட்சியாக இருந்தபோது போட்ட “போலி விவசாயி”, “போலி பச்சைத் துண்டு” வேடத்தை “ரிப்பீட்” எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி செய்ய வேண்டாம் என்று காட்டமாக கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையையும், வேளாண் நிதிநிலை அறிக்கையையும்” பார்த்து, உழவர்களை வஞ்சித்து ஆட்சி செய்துவிட்டுச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்களுக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது. அதனால்தானோ என்னவோ “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்று ஒரு பச்சைப் பொய்யை அறிக்கையாக கொடுத்திருக்கிறார்.

அன்றாட அரசியல் நிகழ்வுகள் குறித்து ஏதும் அறியாமல் - உட்கட்சியில் என்றைக்கு நமது பதவி போகும்- எத்தனைப் பேர் நம் பதவிக்குக் குறி வைக்கிறார்கள் என்ற தாங்க முடியாத கவலையில் “தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் அலைக்கழிப்பு” என்றும் “வேளாண் பட்ஜெட்டுக்கு என்று தனி நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை” என்றெல்லாம் அரைவேக்காட்டுத்தனமாக, ஒரு முதலமைச்சராக இருந்தவர்- இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அறிக்கை விடுவதும்- பேட்டியளிப்பதும் கேலிக்கூத்தாக இருக்கிறது.
ஆட்சி நிர்வாகம் இவர் முதலமைச்சராக இருந்தபோது எப்படித் திண்டாடியிருக்கும் என்பது இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது என்று சாடியுள்ளார்.

உழவர்கள் தற்கொலை,உழவர்களின் “கிசான் இன்சூரன்ஸ்” திட்டத்தில் முறைகேடு,உழவர்கள் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடையுத்தரவு வாங்கியது- உழவர்களை வஞ்சிக்கும்- உழவுத் தொழிலை அடியோடு பாதிக்கும் ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்து- வாக்களித்து- வக்காலத்து வாங்கியது- மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு விட்டு, பிறகு தூர்வாருகிறோம் என்று “முறைகேடு”, குடிமராமத்து ஊழல்-இப்படி உழவர்களின் நாடி நரம்புகளில் சம்மட்டி எடுத்து அடிக்கும் வகையில் ஒரு அராஜக ஆட்சியை நடத்திய பழனிசாமி, “தனது உழவர் விரோத ஆட்சியை வேளாண் பெருங்குடி மக்களின் பொற்காலம்” என்று கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் சொல்கிறார் என்றால்- பொய் சொல்வதில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு நிகர் அவரேதான் என்பதில் சந்தேகமில்லை.

உழவர்களுக்கு எதாவது ஒரு பாதிப்பு என்றால் உடனடியாக கண்காணிக்கப்பட்டு சரிசெய்யப்படுகிறது. விவசாயிகளின் தேவைகளை அவர்கள் கேட்பதற்கு முன்பே இந்த் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க ஆணை, மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே தூர் வாரி– காவிரி நீர் கடைமடைக்கும் செல்வதை உறுதி செய்தது உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

மேலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலவச மின்சாரத்திற்கு இடையூறு செய்ய வரும் மத்திய அரசின் மின்சார சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியுள்ளார். காவிரி டெல்டாவைப் பாதிக்கும் மேகதாது அணைப் பிரச்சினை குறித்து- காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதம் நடத்துவதற்கே வாய்ப்பு அளிக்காமல் எதிர்ப்பு தெரிவித்து- கர்நாடக அரசைப் பின்வாங்க வைத்துள்ளார். முல்லைப் பெரியாறு பிரச்சினையாக இருந்தாலும் - தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான நதிநீர் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் முனைப்புடன் செயல்பட்டு உழவர் நலனை - தமிழக உரிமையை நிலைநாட்டி வருகிறார் முதலமைச்சர்.

அதோடுமட்டுமல்லாமல் நியூட்ரினோ திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றிற்கு கையெழுத்துப் போட முடியாது என்று துணிச்சலுடன் கூறி இருக்கிறார். அதுபோல், கடந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் அளித்த அறிவிப்புகளை இந்த வேளாண் நிதி நிலை அறிக்கைக்குள் நிறைவேற்றியுள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு தான் என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!