மத்திய அரசுதான் தாறுமாறாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துது.. இப்போ சொத்து வரியை உயர்த்தலாமா.? வைகோ ஆதங்கம்.!

Published : Apr 03, 2022, 10:11 PM IST
மத்திய அரசுதான் தாறுமாறாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துது.. இப்போ சொத்து வரியை உயர்த்தலாமா.? வைகோ ஆதங்கம்.!

சுருக்கம்

 கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மையால் மக்கள் சொல்லொணா வேதனையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.   

தமிழகத்தில் சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

சொத்து வரி உயர்வு

இதுதொடர்பாக வைகோ அறிகை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்குக் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்களுக்கு 25 சதவிகித சொத்துவரி உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் புதியதாக இணைந்த பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 50 சதவிகிதம் சொத்துவரி உயர்த்தப்படுகிறது.

கொரோனா தாக்கம் 

சென்னையின் முக்கிய பகுதிகளில் 600 முதல் 1200 சதுரடி பரப்பளவு கொண்ட குடியிருப்புகளுக்கு 75 சதவிகிதமும், 1200 லிருந்து 1800 சதுரடி கொண்ட குடியிருப்புகளுக்கு 100 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் 15- ஆவது நிதி ஆணையம் கொடுத்த நிபந்தனைகளின் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்படுவதாகவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த நிதி ஆணையம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதார வீழ்ச்சி மற்றும் வேலையின்மையால் மக்கள் சொல்லொணா வேதனையில் வாழ்க்கையை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

உத்தரவை திரும்ப பெறுக

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசு தாறுமாறாக உயர்த்தியதால் மக்கள் மீதான சுமை அதிகரித்துவிட்டது. இந்நிலையில் சொத்துவரி உயர்வும் மக்களை பாதிக்கும். எனவே இதனை மறுபரிசீலனை செய்து, சொத்து வரி உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!