உங்கள் வீட்டுப்பிள்ளையாக நினைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றி.. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய பத்மபிரியா

By vinoth kumarFirst Published May 13, 2021, 3:21 PM IST
Highlights

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது கமல்ஹாசனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளது கமல்ஹாசனை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நடந்து முடிந்த  சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர். 

அதேபோல், இன்று யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் சந்தோஷ் பாபு அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும்   விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பாக பத்மப்ரியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- அன்பு நிறைந்த மதுரவாயல் தொகுதி மக்களுக்கு  என் மீது நம்பிக்கை கொண்டு எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

என்னைப் போல் எவ்வித அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி ஏற்றுக்கொண்டு வாக்களித்தமைக்கும் நம்பிக்கை கொடுத்து ஊக்கம் கொடுத்தமைக்கும் நான் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக நான் சார்ந்திருந்த மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன். எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என கூறியுள்ளார்.

click me!