மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படுகிறது; உத்தவ் தாக்கரே ராஜினாமா? 

Published : Jun 22, 2022, 12:25 PM ISTUpdated : Jun 22, 2022, 12:43 PM IST
மகாராஷ்டிரா சட்டசபை கலைக்கப்படுகிறது; உத்தவ் தாக்கரே ராஜினாமா? 

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதை சூசகமாக  அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவ சேனாவின் ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதை சூசகமாக 
அந்தக் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மூத்த தலைவருமான சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார். 


சிவ சேனா கட்சியின் 20 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அந்தக் கட்சியின் மூத்த தலைவரும் 
அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டேவுடன் குஜராத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்பட்டது. 
இதையடுத்து இன்று 40 எம்.எல்.ஏக்களுடன் அசாம் மாநிலத்தில் இருக்கும் கவுகாத்தியில் 
தஞ்சம் அடைந்து இருப்பதாக ஏக்நாத் கூறியிருந்தார்.

இவர்களுடன் சிவ சேனா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சிவ சேனா மூத்த தலைவரும், 
செய்தி தொடர்பாளரும், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு வலதுகரமாக இருக்கும் சஞ்சய் ராவுத் 
தெரிவித்து இருந்தார். ஆனால், தற்போது மகாராஷ்டிரா சட்டசபை முடிவுக்கு 
வருகிறது என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது மகாராஷ்டிரா அரசியல் வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் ராஜினாமா 
மகாராஷ்டிரா மாநிலத்தில் 40 எம்.எல்.ஏக்கள் போர்க் கோடி தூக்கி இருக்கும் நிலையில் 
வெறும் 55 எம்.எல்.ஏக்களுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வந்த முதல்வர் உத்தவ் தாக்கரே தனது 
பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சிறிது நேரத்திற்கு முன்புதான் தனது டுவிட்டர் பக்கத்தில் விதான் சட்டசபை 
முடிவுக்கு வருகிறது என்று சிவ சேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத் சூசமாக தெரிவித்து இருந்தார். இதைத் 
தொடர்ந்து முதல்வர் உத்தவ் ராஜினாமா செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் சிறிது நேரத்தில் 
அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

பாஜகவின் தூண்டுதலில்தான் ஏக்நாத் இதுபோன்று நடந்து கொள்கிறார் என்று இன்று காலை 
சிவ சேனா கட்சியினர் மும்பையில் பாஜகவுக்கு எதிராக கோஷம் எழுப்பி 
கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

PREV
DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!