நான் உயிருக்கு பயந்தவள் இல்லை… வாட்ஸ் அப்பில் மிரட்டிய ரௌடிக்கு பெண் சூப்பிரண்டு சூப்பர் பதில் !!

By Selvanayagam PFirst Published Sep 8, 2018, 8:44 AM IST
Highlights

நான் ஒன்றும் உயிருக்கு பயந்தவள் இல்லை என்றும், உன்னை சும்மா விட மாட்டேன் என்றும், விரைவில் இதே மதுரை ஜெயிலில் நீ கம்பி எண்ணுவாய் என்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டிய ரௌடிக்கு மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளாவை தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ரௌடி புல்லட் நாகராஜ் என்ற ரௌடி வாட்ஸ்–அப்‘பில் பகிரங்கமாக மிரட்டி பேசியிருக்கும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் மீது கொலை, கொள்ளை, வழிப்பறி என 30–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. புல்லட் நாகராஜின் அண்ணன், ஒரு கொலை வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் கைதியாக இருந்தார். அப்போது அவர் தூக்க மாத்திரைகளை அதிகமாக வாங்கி சாப்பிட்டு போதை ஏற்றி கொள்வாராம். சில நாட்களுக்கு முன்பு அவரை பரிசோதனை செய்ய வந்த பெண் டாக்டரிடம் தனக்கு மருந்து அதிகமாக ஏற்றி ஊசி போடுமாறு கூறியுள்ளார்.

பெண் டாக்டர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால், அவரை அவதூறாக திட்டியுள்ளார். இதுகுறித்து அந்த டாக்டர், சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளாவிடம் புகார் செய்தார். அதையடுத்து சூப்பிரண்டு, அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் புல்லட் நாகராஜின் அண்ணன் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவர் ஜெயிலில் நடந்தது குறித்து தம்பி புல்லட் நாகராஜிடம் கூறியுள்ளார்.

அதைதொடர்ந்து புல்லட் நாகராஜ் சிறைத்துறை சூப்பிரண்டுக்கு ‘வாட்ஸ்–அப்‘பில் ஆடியோ மூலம் மிரட்டல் விடுத்தார்.நான் புல்லட் நாகராஜ் பேசுறேன். தமிழ்நாட்டில் நான் பார்க்காத ஜெயில் கிடையாது. என் கண் முன்னாடி எத்தனையோ பேரை ஜெயிலில் அடிச்சு கொன்றிருக்காங்க. மதுரை ஜெயிலை பொறுத்தவரை உங்களுக்கு நிர்வாகத் திறமை கிடையாது. சிறையில் கைதி மீது கை வைச்ச ஒரே காரணத்திற்காக ஜெயிலர் ஒருவரை எரிச்சு கொன்றது ஞாபகம் இருக்கும். ஏன் திருந்த மாட்டேங்கிறீங்க. என மிக பதிரங்கமாக மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா நேற்று  மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம்  புகார் அளித்துள்ளார்..

இந்நிலையில்  சிறைத்துறை சூப்பிரண்டு ஊர்மிளா செய்தியாளர்களிடம் பேசும்போது ரவுடியின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். நான் உயிருக்கு பயந்தவள் இல்லை என்றும் விரைவில் இதே மதுரை ஜெயிலில் நீ கம்பி எண்ணுவாய் என்றும் வாட்ஸ் அப்பில் மிரட்டிய ரௌடிக்கு மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு ஊர்மிளா பதிலடி கொடுத்துள்ளார்.

click me!