பேஸ்புக்கில் வலைவிரித்த கார் டிரைவர்.. தொக்காக மாட்டிய 17 வயது சிறுமி.. காதற காதற செய்த கொடூரம்.

By Ezhilarasan BabuFirst Published Jan 20, 2021, 12:37 PM IST
Highlights

ஓசூரில் ஆசை வார்த்தை கூறி 17 வயது  சிறுமியை கர்ப்பமாக்கிய ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. 

ஓசூரில் ஆசை வார்த்தை கூறி 17 வயது  சிறுமியை கர்ப்பமாக்கிய ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபகாலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. காதலிப்பதைபோல் நடித்து ஏமாற்றி பெண்களை சீரழிப்பது, பணத்திற்காக காதலிப்பதைபோல நடிப்பது. விதவை மற்றும் கணவனை பிரிந்து வாழும் பெண்களை குறிவைத்து பாலியல் வன்புணர்வு செய்வது. காதலிக்க மறுக்கும் பெண்களை அடித்து கொலை செய்வது. போன்ற பல்வேறு குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. 

இவற்றை தடுக்க காவல்துறை எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் இந்த வகை குற்றங்கள் குறைந்தபாடில்லை. அந்த வரிசையில் ஒசூரில் 17 வயது சிறுமி அசைவார்த்தைக் கூறி சீரழிக்கப்பட்டுள்ளார். அதாவது  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்  பாகலூர்  பகுதியைச்  சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் , ஓசூர் அலசனத்தம் பகுதியில் குடியிருக்கும் கார் ஓட்டுனர்  டேனியல் (22)-என்பவருக்கும்  ஃபேஸ்புக்  மூலமாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அது காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இருவரும் அடிக்கடி தனிமையாக சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் டேனியல், திருமணம் செய்து கொள்வதாக  வாக்குறுதி கொடுத்து பல ஆசை வார்த்தைகளை கூறி அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். 

இதன் காரணமாக  சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து சிறுமியின் உடல்நிலையில் மாற்றத்தை அறிந்த அவரின் பெற்றோர். சிறுமியை அழைத்து சென்று  மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டத்தில்  சிறுமி  கர்ப்பமான இருப்பது தெரிய வந்துள்ளது, இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர். இது குறித்து ஓசூர் மாநகர மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார்  வழக்கு பதிவு செய்து டேனியலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி சீரழிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!