உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.பி., கனிமொழிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இதனை முன்னிட்டு ஒரு மாத காலமாக தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்த திமுக எம்பி கனிமொழிக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
Wishing DMK MP healthy vibes and swift recovery from her illness. May you get well at the earliest!
— Dr C Vijayabaskar (@Vijayabaskarofl)
இதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே கனிமொழி விரைவில் குணமடைய வேண்டி அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்துள்ள கனிமொழி உங்கள் அக்கறைக்கும், அன்புக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.