சீமான் சீரழித்த நடிகைகளின் லிஸ்ட்... படுக்கையறை ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் ஆடியோ ஆதாரம் உள்ளே..!

By Thiraviaraj RMFirst Published Feb 28, 2020, 3:22 PM IST
Highlights

நடிகை விஜயலட்சுமியை மட்டுமல்ல பூஜாவின் வாழ்க்கையையும் சீமான் சீரழித்துள்ளார் என அவரது பழைய நண்பர் பாண்டியன் பேசியுள்ள ஆடியோ பதிவு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

நடிகை விஜயலட்சுமியை மட்டுமல்ல பூஜாவின் வாழ்க்கையையும் சீமான் சீரழித்துள்ளார் என அவரது பழைய நண்பர் பாண்டியன் பேசியுள்ள ஆடியோ பதிவு தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 

இதுகுறித்த அந்த ஆடியோ பதிவில், ‘’சீமானுக்கு அடைக்கலம் கொடுத்ததே கொளத்தூர் மணிதன். இப்போது சீமானை இயக்கிக் கொண்டிருப்பது மத்திய உளவுத்துறையும் குருமூர்த்தியும் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு 100% என்னால் ஆதாரம் தர முடியும். சீமான் யார் பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். மனைவி கயல்விழி மூலம் அண்ணா திமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க முன் வந்தார். அப்போது ஓ.பி.எஸ்- எடப்பாடியை சந்தித்து ஒரு கோடி ரூபாயை மதுரையில் சீமான் வாங்கிக் கொண்டார்.  சீமானுக்காக அவரது மனைவி கயல்விழி லாபி செய்வார். கயல்விழியை காரணம் காட்டி சீமான் தப்பித்துக் கொள்வார்.

அப்படி ஒருமுறை சீமான் தப்பித்துச் செல்லும்போதுதான் தேடிப்பொ கயல்விழி ’கட்டுடா தாலியை’என்று வற்புறுத்தி இருக்கிறார். கயல்விழி சீமானுக்கு ஒன்பதாவது ஆள். பாவம் நடிகை விஜயலட்சுமி ஊர் ஊராக போய் படுக்கையை பகிர்ந்து தான் சீமானுக்கு காசு கொடுப்பார். அதை நானே பார்த்திருக்கிறேன். பாவம் அவள் நல்லபெண். அவளை காலி செய்துவிட்டான். ஒரு இலங்கைகாரர் இந்தியா வந்து தனது மகளை கல்யாணம் செய்து கொள்ளவேண்டும் என கூறி ஒரு கோடி ரூபாய் சீமானிடம் கொடுக்கிறார். ஈழப்பிரச்சனையின்போது அந்தப் பெண்ணை கையோடு அழைத்துச் சென்று விடுவான். நன்றாக அனுபவித்து விட்டு அந்தப்பெண்ணை கைவிட்டு விட்டான்.

தம்பி பட கதாநாயகி சிங்களத்தை சேர்ந்த நடிகை பூஜாவை பயன்படுத்தி நாசமாக்கி விட்டான். கமிஷனர் ஆபீஸில் சீமான் மீது பல கற்பழிப்பு வழக்குகள் இருக்கின்றன. அதற்காகத் தான் ஜெயலலிதாவை பார்க்க தலைகீழாய் நின்று தண்ணீர் குடித்தார். ’சரி, என்னை வந்து பார். உன் மீது கற்பழிப்பு வழக்குகள் இருக்கின்றன. நீ பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டாம்’என தன்னை சந்திக்க ஏற்பாடு செய்தார் ஜெயலலிதா. 

இவன் ஜெயிலில் இருக்கும்போது ஒருவர் கூட போய் பார்க்கவில்லை. நாதியில்லை. அதன்பிறகு கருணாநிதியிடம் காசு வாங்கிவிட்டு ஜெயிலில் இருந்து வெளியே வர மறுத்து விட்டார்.  பாண்டிச்சேரி சிறைக்குள் இருக்கும் போது அங்கு சிறைக்காவலர் லோகு என்பவர் மூலம் தினமும் ஆயிரம் ரூபாய், ஒரு ஃபுல் பாட்டில் கொடுத்து தினமும் அனுசரித்து வந்துள்ளார்.  சீமான் மீது பல கொலை வழக்குகள் இருக்கின்றன. எனப் புட்டுப்புட்டு வைத்துள்ளார் அவரது நண்பர்.

ஆடியோ ஆதாரம் பார்க்க: விஜயலட்சுமி வெளியிட்ட சீமானின் சர்ச்சை ஆடியோ..! ஆதாரத்தோடு பொறி கிளப்பும் நடிகை வீடியோ..

click me!