என் உயிருக்கு நிகரான தலைவா.. அடுத்த ஜென்மத்திலும் நீங்கள்தான் தலைவர்.. அதகளப்படுத்தும் அன்வர் ராஜா.!

By Asianet TamilFirst Published Jan 16, 2022, 9:13 PM IST
Highlights

‘கட்சியிலிருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை. ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன் அதில் நான் என்னை மறக்கிறேன்’ என்று போஸ்டர் அடித்து அன்வர் ராஜா ஒட்டியிருந்தார்.

இந்த பிறவிக்குப் பிறகு இன்னொரு பிறவி இருக்குமானால், அதில் நீங்கள்தான் என் தலைவர் என எம்.ஜி.ஆர். பிறந்த நாளையொட்டி முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து கடந்த நவம்பர் 30 அன்று முன்னாள் எம்.பியும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா நீக்கப்பட்டார். கட்சிக்கு விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், அன்வர் ராஜா நீக்கப்பட்டதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அறிவித்தனர். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அவர் வேறு கட்சி எங்கும் செல்லவில்லை. எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதியான அன்வர் ராஜா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால், அவர் மிகவும் வருத்தமான மன நிலையில் இருப்பதாக மட்டும் தகவல் வெளியானது. இந்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில், அன்வர் ராஜா பெயரில் ராமநாதபுரத்தில் போஸ்டர் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளன.

அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் 105-வது பிறந்த நாள் நாளை (ஜனவரி 17) கொண்டாடப்பட உள்ளன. எம்.ஜி.ஆர். பிறந்த நாளைக் கொண்டாட அதிமுக, அமமுக சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா, அக்கட்சிக் கொடியின் கலரை பயன்படுத்தி நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில், ‘என் உயிருக்கு நிகரான தலைவரே; இந்த பிறவிக்குப் பிறகு இன்னொரு பிறவி இருக்குமானால், அதில் நீங்கள்தான் என் தலைவர்’ என அன்வர் ராஜா பெயரில் ராமநாதபுரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஏற்கனவே எம்.ஜி.ஆர். நினைவு நாளான டிசம்பர் 24 அன்று, ‘கட்சியிலிருந்து என்னால் விலகி இருக்க முடியவில்லை. ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன் அதில் நான் என்னை மறக்கிறேன்’ என்று போஸ்டர் அடித்து அன்வர் ராஜா ஒட்டியிருந்தார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளிலும் போஸ்டர் அடித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் அன்வர் ராஜா.


 

click me!