எனக்கே தெரியாமல் நான் பொதுக்கூட்டம் நடத்துறனா..? கமல் மறுப்பு

 
Published : Jan 22, 2018, 02:36 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
எனக்கே தெரியாமல் நான் பொதுக்கூட்டம் நடத்துறனா..? கமல் மறுப்பு

சுருக்கம்

kamal denied that the information of madurai meeting

பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என கமல் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் 21ம் தேதி அவர் பிறந்த ராமநாதபுரம் மண்ணிலிருந்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாமின் இல்லத்தில் அரசியல் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக கமல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 4 மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது, பிப்ரவரி 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கும் கமல், ராமநாதபுரம் தொடங்கி மாவட்ட வாரியாக மக்களை சந்தித்துவிட்டு பிப்ரவரி 24ம் தேதி மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தி முதற்கட்ட சந்திப்பை நிறைவுசெய்வார் என சில ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதையடுத்து, ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு ரசிகர்களிடம் பேசிய கமல், மதுரையில் பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக வெளியான தகவல் பொய் என தெரிவித்து, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!