"ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்கவே பலிக்காது" - அடித்து கூறும் ஜெயக்குமார்

 
Published : Jun 18, 2017, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
"ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்கவே பலிக்காது" - அடித்து கூறும் ஜெயக்குமார்

சுருக்கம்

jayakumar says that stalin never will be CM of tamilnadu

தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை கலைக்க முயற்சி செய்யும் நோக்கில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவரது உள்நோக்கம் பகல் கனவாகவே முடியும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரவித்தார்.. 

ஜிஎஸ்டியில் மேலும் பல பொருட்களுக்கான வரி விதிப்பு இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 17வது கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்ககப்படுகிறது.

இந்த கூட்டத்தில் கலந்த கொள்வதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழக அரசு ஜனநாயக முறைப்படி மிக நன்றாக செயல்பட்டு வருவதாக ஜெயக்குமார்  தெரிவித்தார். ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள் நோக்கத்துடன் அதிமுக அரசு மீது தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

சிறு பிரச்சனைகளை எல்லாம் பெரிதாக்கி அதைப் பயன்படுத்தி முதலமைச்சராக ஸ்டாலின் துடிக்கிறார் என தெரிவித்த ஜெயகுமார் அவரது உள்நோக்கம் பகல் கனவாகவே முடியும் என்று கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுக ஆட்சிக்கு வந்ததே இவர்கள் செய்த தவறால்தான்..! ஒதுங்கிப் போற ஆள் நான் இல்லை... சசிகலா சூளுரை..!
'ராமதாஸ் - அன்புமணி சமரசத்துக்கு நான் கேரண்டி'.. இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்.. பாமகவுக்கு இத்தனை சீட்களா?