அவருக்கு ஓட்டு கேட்டது பெரிய பாவம்! இவரு வசனத்தை மாத்தி மாத்தி பேசுறார்: யார், யார் சொன்னது?

Asianet News Tamil  
Published : Feb 06, 2018, 01:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
அவருக்கு ஓட்டு கேட்டது பெரிய பாவம்! இவரு வசனத்தை மாத்தி மாத்தி பேசுறார்: யார், யார் சொன்னது?

சுருக்கம்

It was a great sin to ask him He speaks verse Who who said

உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு  இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு  ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி.

*    உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு அரசியல் கட்சி தொடங்குவது பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
-    விஷால்

*    டில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் கம்பீரமான பெயர் இருக்கக்கூடாது என்கிற மத்திய அரசின் முடிவை தமிழர்களின் உணர்வுகள் மீதான மொழி வெறி தாக்குதல் என்றே கருதுகிறேன்!
-    ஸ்டாலின்

*    உயர்கல்வித்துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்தும், கடந்த 15 ஆண்டுகளில் பல்கலைக்கழகங்களில் நடந்த பல்கலை நியமனங்கள் குறித்தும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். நேர்மையாக செயல்படும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இதற்கு பரிந்துரை செய்யவேண்டும்.
-    அன்புமணி

*    கர்நாடக பவன், ஆந்திர பவன், ஒடிசா பவன் என டெல்லியிலுள்ள மற்ற மாநிலங்களின் தங்கும் இடங்கள் அழைக்கப்படும் போது தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மட்டும் மாற்ற முயற்சிப்பது, மத்திய அரசின் சகிப்புத்தன்மை பற்றி சந்தேகிக்க வைக்கிறது.
-    திருநாவுக்கரசர்.

*    நதி நீர் இணைப்பு பற்றி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்காதது, மிகப்பெரிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.
-    விஜயகாந்த்

*    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தம்பித்துரைக்கு ஓட்டு கேட்டதற்காக கரூர் தொகுதி மக்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
-    செந்தில் பாலாஜி.

*    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவுமில்லை.
-    தம்பிதுரை.

*    பல்கலைகழக பணி நியமன விஷயத்தில் யார் முறைகேடு செய்திருந்தாலும் சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.
-    ஓ. பன்னீர்செல்வம்.

*    காஷ்மீர் எங்களுடையது. எங்கள் நாட்டின் ஒரு பகுதி அது. பாகிஸ்தான் எங்களிடமிருந்து அதை அபகரிக்க முயலுகிறது. பாகிஸ்தான் ஒரு முறை சுட்டால், நாங்கள் தொடர்ந்து தாக்குவோம்.
-    ராஜ்நாத் சிங்

*    கமல்ஹாசன் வசனத்தை மாற்றி மாற்றி பேசுவார். ஒரு எதிர்ப்பு வந்ததும் ஒரு வசனத்தை பேசுவார். மற்றொரு எதிர்ப்பு வந்ததும் அதற்கு வேறு ஒரு வசனத்தை பேசுவார்.
-    தமிழிசை சவுந்திரராஜன்.

PREV
click me!

Recommended Stories

விஜய் மட்டுமே முழு காரணம்.. கரூரை மீண்டும் கையிலெடுத்த திமுக.. கடுமையான விமர்சனம்!
திமுக ஆட்சியில் தலைதூக்கிய துப்பாக்கி கலாசாரம்.. போட்டுத் தாக்கிய அதிமுக!