பெண்களை அவமானப்படுத்துவதா..? திமுகவினருக்கு எதிராக நோட் போட்ட பிரதமர் மோடி..!

By Thiraviaraj RMFirst Published Mar 30, 2021, 2:48 PM IST
Highlights

பெண்களை இழிவு படுத்துவது என்பது திமுக மற்றும் காங்கிரசின் கலாச்சாரம் எனவும் பெண்களை அவமதித்த திண்டுக்கல் லியோனி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
 

பெண்களை இழிவு படுத்துவது என்பது திமுக மற்றும் காங்கிரசின் கலாச்சாரம் எனவும் பெண்களை அவமதித்த திண்டுக்கல் லியோனி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

வெற்றிவேல் வீரவேல் என தனது உரையை தாராபுரத்தில் பிரதமர் மோடி துவங்கினார். தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பொல்லான், காலிங்கராயன் போன்றோரை கொடுத்த ஊர் இது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது எனவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்கிற முழக்கத்துடன் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேவேந்திரகுல வேளாளர் எனும் அறிவிப்பை வெளியிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் வேலையை தற்போது எதிரணியினர் இறங்கியுள்ளனர். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவை 2ஜி ஏவுகணை என மறைமுகமாக குறிப்பிட்டு மோடி உரையார்றியுள்ளார். பெண்களை இழிவு படுத்துவது என்பது திமுக மற்றும் காங்கிரசின் கலாச்சாரம் எனவும் பெண்களை அவமதித்த திண்டுக்கல் லியோனி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக பட்டத்து இளவரசருக்காக அக்கட்சியில் முக்கிய தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். காங்கிரசும் திமுகவும்  முதல்வரின் தாயை அவமதித்துள்ளனர். தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையம் தமிழகத்தில் அமைய உள்ளது; இதன்மூலம், உலக அரங்கில் தரமான பொம்மைகளை தயாரிக்கும் மையமாக தமிழகம் இருக்கும்.  தமிழகசட்டசபைத்தேர்தல்2021  மக்கள் இந்தியாவுக்கு என்றும் பெருமை சேர்த்து வருகின்றனர். 

தமிழ் மொழியில் தொழில்நுட்ப கல்வி கற்க நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி ஆண்டாள் , ஒளவையாரின் உத்வேகங்களை பெற்றுள்ளது; பெண்களை வலுப்படுத்தவே பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். வெற்றிவேல் வீரவேல் என தனது உரையை தாராபுரத்தில் பிரதமர் மோடி துவங்கினார். தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரத்திற்கு வந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று மோடி தெரிவித்துள்ளார். திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, பொல்லான், காலிங்கராயன் போன்றோரை கொடுத்த ஊர் இது என மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழகத்தின் கலாசாரத்தால் ஒட்டுமொத்த இந்தியாவே பெருமை கொள்கிறது எனவும் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி என்கிற முழக்கத்துடன் தான் நாங்கள் மக்களை சந்திக்கிறோம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேவேந்திரகுல வேளாளர் எனும் அறிவிப்பை வெளியிட்டது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தான், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்பாதை திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தின் பெண்களை இழிவுபடுத்தும் வேலையை தற்போது எதிரணியினர் இறங்கியுள்ளனர். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசாவை 2ஜி ஏவுகணை என மறைமுகமாக குறிப்பிட்டு மோடி உரையார்றியுள்ளார். பெண்களை இழிவு படுத்துவது என்பது திமுக மற்றும் காங்கிரசின் கலாச்சாரம் எனவும் பெண்களை அவமதித்த திண்டுக்கல் லியோனி மீது திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

click me!