நாட்டின் சிறந்த முதல்வர் யார்…? கரூர் எம்பி ஜோதிமணி போட்ட ‘தடாலடி’ டுவிட்டர்..

Published : Oct 19, 2021, 08:36 PM IST
நாட்டின் சிறந்த முதல்வர் யார்…? கரூர் எம்பி ஜோதிமணி போட்ட ‘தடாலடி’ டுவிட்டர்..

சுருக்கம்

இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

சென்னை: இந்தியாவில் சிறந்த முதலமைச்சர் யார் என்று சர்வே ஒன்றை மேற்கோள் காட்டி ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

நாட்டின் சிறப்பாக முறையில் செயல்படும் முதலமைச்சர் யார் என்று ஐஏஎன்எஸ் – சிவோட்டர்ஸ் இணைந்து சர்வே நடத்தியது. அதன் முடிவுகளும் வெளியாகி இருக்கிறது.

இந்த முடிவுகள் பற்றி கரூர் எம்பி ஜோதிமணி தமது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:

இந்தியாவில் மிகச்சிறப்பாக செயல்படும் முதலமைச்சர்- சத்தீஷ்கர் காங்கிரஸ் முதலமைச்சர் திரு.பூபேஷ்பகேல் அவர்கள்.

காங்கிரஸ் கட்சியின் முக்கியமான தலைவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் நக்சல்கள் கொடூரமாக படுகொலைசெய்தனர். அதை பாஜக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அடுத்து யார் ? என்ற கேள்வி எழுந்த போது சாம்பலில் இருந்து உயிர்த்தெழுந்ததுபோல் எழுந்தவர்தான் பூபேஷ்பகல்.

அடுத்த தேர்தலில் பாஜகவை உருத்தெரியாமல் ஆக்கினார். இன்றுவரை ஆர் எஸ் எஸ் / பாஜகவிற்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர். முதலமைச்சர் ஆனபிறகு 15 ஆண்டுகாலம் பாஜகவால் சிதைக்கப்பட்ட மாநிலத்தில், ஆட்சியையும் திறம்பட நடத்திக்கொண்டு,கட்சிக்காக ஓடி ஓடி உழைப்பவர். அவரது சிறப்பான பணி தொடரட்டும் என்று குறிப்பிட்டு உள்ளார். 

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் போயஸ் கார்டன் கதவுகளை தட்டிய போலீஸ்..! ஜெயலலிதா கைதும், அதிரடி திருப்பங்களும்..! நடந்தது இதுதான்.!
விஜயின் அரசியல் ரூட் க்ளியர்.! தனி ஒருவனாக வருவேன்.! தளபதியின் முடிவுக்கு இதுதான் காரணம்.!