ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் சோதனை தொடரும் - கிடுக்குப்பிடி பிடிக்கும் ஐ.டி அதிகாரிகள்..!

 
Published : Nov 09, 2017, 08:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:25 AM IST
 ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டில் சோதனை தொடரும் - கிடுக்குப்பிடி பிடிக்கும் ஐ.டி அதிகாரிகள்..!

சுருக்கம்

Income Tax Department officials said that Vivek will continue the night and day at home.

விவேக் வீட்டில் இரவு மற்றும் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்நாடு புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சசிகலா உறவினர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். 

இந்த சோதனையை 200 கார்களில் வந்த 1800 வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

அதன்படி ஜெயா டிவி சிஇஓவும் இளவரசியின் மகனுமான விவேக்கின் மகாலிங்கபுரம் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை 13 மணி நேரமாக நடைபெற்று வருகின்றது. 

இதில் மன்னார்குடியில் திவாகரன் ஆதரவாளர் வீடுகளில் நடந்த வருமானவரி சோதனை நிறைவடைந்துள்ளது. ஆதரவாளர்கள் செல்வம், பேராசிரியர் அன்புக்கரசி வீடுகளிலும் சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

ஆனால் மகாலிங்கபுரத்தில் உள்ள விவேக் வீட்டில் இரவு மற்றும் நாளையும் சோதனை தொடரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


 

PREV
click me!

Recommended Stories

நல்லகண்ணு மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதி.. உடல்நிலை எப்படி இருக்கு?
என்னை அந்த மாதிரி நினைக்காதீர்கள்.. நான் எந்த தவறும் செய்யவில்லை.. திருச்சி மக்களிடம் உருகிய கே.என்.நேரு!