அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

Published : Jul 09, 2020, 10:53 AM IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு... அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்..!

சுருக்கம்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது; டிவி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். இந்நிலையில் போதிய வசதிகள் இல்லாததால் ஏழைமாணவர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில் , ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இதுகுறித்து கூறுகையில், ’’தமிழகத்தில் ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தப்படாது. டி.வி. மூலமாகத்தான் பாடத்திட்டம் கற்பிக்கப்படும். பிளஸ்-2வில் எஞ்சிய ஒரு தேர்வை எழுதாத மாணவர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது.

12-ம் வகுப்பில் 718 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துள்ளனர். விண்ணப்பிக்காத 34,812 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்தால் எழுதலாம்’’என அவர் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

பாமக பிரச்சனைக்கு திமுக தான் காரணம்.. ராமதாஸை சுற்றி தீய சக்திகள்.. ஒரே போடாக போட்ட அன்புமணி!
ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?