பாஜக எம்எல்ஏக்களை தொட்டு பாருங்கள்.. மோடி யார் என்று தெரியும்.. திமுகவை எச்சரித்த மூத்த பத்திரிக்கையாளர்.

By Ezhilarasan BabuFirst Published May 12, 2022, 7:10 PM IST
Highlights

பாஜகவின் 2 எம்எல்ஏக்களை தூக்கி பாருங்கள் பிறகு மோடியின் சுயரூபத்தை காண்பீர்கள் என மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரித்துள்ளார். அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட இன்னும் ஏராளமான துறைகள் மோடியுடன் கூட்டணியில் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

பாஜகவின் 2 எம்எல்ஏக்களை தூக்கி பாருங்கள் பிறகு மோடியின் சுயரூபத்தை காண்பீர்கள் என மூத்த பத்திரிகையாளர் மணி எச்சரித்துள்ளார். அமலாக்கத்துறை,  வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட இன்னும் ஏராளமான துறைகள் மோடியுடன் கூட்டணியில் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல்  பாஜக அதிமுகவுக்கு இடையேயான மோதல் பன்மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் ஆர்.என் ரவி தமிழக ஆளுநராக பொறுப்பேற்றது முதல் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போர் கடுமையாக இருந்து வருகிறது. இது ஒரு புறமிருக்க பிற கட்சிகளின் செல்வாக்கு மிக்கவர்கள் மற்றும் முக்கிய அரசியல் புள்ளிகளைபாஜகவுக்கு இழுக்கும் முயற்சியில்  அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வரிசையில் திமுக கொள்கை பரப்புச் செயலாளரும் முக்கிய எம்.பியுமான திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். திமுகவில் உழைப்புக்கு அங்கீகாரம் இல்லாததால் பாஜகவில் இணைந்ததாக அவர் கூறினார்.

இனி தமிழ் நாட்டின் எதிர்காலம் பாஜகதான் என்றும் திமுகவுக்கு அஸ்தமனம் ஆரம்பித்து விட்டது என்றார். பாஜகவில் இணைந்தது குறித்து பேசிய  திமுக தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், செல்வாக்கு இல்லாத சூர்யா சிவாவைப் பாஜகவில் சேர்த்துக்கொணடு ஏதோ சாதித்து விட்டது போல பாஜகவினர் தம்பட்டம் அடிக்கிறார்கள். பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏக்கள் எங்கள் தொடர்பில் உள்ளனர், எங்கள்  தலைவர் ஸ்டாலின் கண்ணசைத்தால் அந்த இரண்டு எம்எல்ஏக்களையும் தூக்கி விடுவோம் என விமர்சித்திருந்தார். அவரின் இந்த பேச்சு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது, இதற்கு பதிலடி கொடுத்த சூர்யா சிவா, பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்களை நீங்கள் தூக்கினால் உங்கள் ஆட்சியையே நாங்கள் தூக்கி விடுவோம் என கூறினார்.

இது ஒருபுறமிருக்க இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தா மூத்த பத்திரிகையாளர் மணி, திமுகவினர் வாய்க்கு வந்ததை எல்லாம்  பேசக்கூடாது. பாஜகவின் இரண்டு எம்எல்ஏக்களை தூக்கி விடுவோம் என தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கூறுகிறார், அப்படி பாஜகவிலிருந்து 2 எம்எல்ஏக்களை நீங்கள் தூக்கி பாருங்கள், அதன்பிறகு மோடியின் உண்மையான முகம் என்னவென்று நீங்கள் பார்க்க நேரிடும். பிரதமர் மோடியுடன் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, போதை கடத்தல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட இன்னும் பல்வேறு அதிகாரமிக்க துறைகள் உள்ளது. அதுகுறித்து திமுகவின் சீனியர்களுக்கு நன்கு தெரியும். 

இப்படி தேவையில்லாமல் பாஜகவை சீண்டினால் என்ன நடக்கும் என்பது டி. ஆர் பாலு போன்றவர்கள் நன்கு அறிவர். இதை தர்மபுரி எம்பி செந்தில்குமார் பேசுகிறாரே தவிற விஷயம் தெரிந்த டி ஆர் பாலு, செந்தில் பாலாஜி போன்றவர்களை ஏன் பேச தயங்குகிறார்கள். அப்படிப் பேசினால் மோடி யார் என்பது தெரிந்து கொள்ள நேரிடும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார். 
 

click me!