பொய் சொல்கிறார் பொன்.மாணிக்கவேல் !! மன உளைச்சலில் குடும்பத்தினர் !! புலம்பும் அமைச்சர்கள் !!

By Selvanayagam PFirst Published Jul 25, 2019, 8:29 PM IST
Highlights

சிலை கடத்தலில் நாங்கள் ஈடுபட்டதாக வெளியான தகவல் பொய்யானது என்று அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி இருந்தார்.

இது தொடர்பான ஆதாரங்களுடன் ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு பொன் மாணிக்கவேலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. சிலை கடத்தலில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பொன்.மாணிக்கவேல் கூறினாலும் அது யார் என்று அவர் கூறிவில்லை.

இந்நிலையில் இது தொடர்பாக ஆம்பூரில் பேட்டியளித்த அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தில் யார் பெயரையும் குறிப்பிடாத நிலையில் எங்களுக்கு எதிராக திட்டமிட்டு பொய் செய்தியை தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது என தெரிவித்தனர்.

அந்த 2 அமைச்சர்கள் நாங்கள் என்பது முற்றிலும் பொய்யானது. செய்தியை வெளியிட்ட அந் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்  என தெரிவித்த அமைச்சர்கள் இந்த குற்றச்சாட்டால் தங்களது குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

click me!