எனக்கு மோடியும், ரஜினியும் இரண்டு கண்கள்... அர்ஜுன மூர்த்தி ஓபன் டாக்..!

By vinoth kumarFirst Published Dec 30, 2020, 4:10 PM IST
Highlights

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார். 

தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என அர்ஜுன மூர்த்தி கூறியுள்ளார். 

ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜூன்மூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- மருத்துவர்களின் ஆலோசனைப்படி ரஜினிகாந்த் கட்சி தொடங்கவில்லை. தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும். 

ரஜினியின் முடிவை உடல்நலம் கருதி எடுத்ததாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம். தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார். எனக்கு இரண்டு கண்கள் ஒன்று பிரதமர் மோடி, மற்றொன்று ரஜினிகாந்த் என அர்ஜூன்மூர்த்தி கூறியுள்ளார்.  ரஜினிகாந்துடன் இருப்பதுதான் என்னுடைய நிலைப்பாடு. ரஜினி மக்கள் சேவை செய்யும்போது துணையாக நிற்பேன். 

மேலும், ரஜினியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். பாஜக உடன் எனக்கு நெருங்கிய உறவு உண்டு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் ரஜினியுடன் சேர்ந்தேன் என அர்ஜூன்மூர்த்தி கூறியுள்ளார். 

click me!