
ஆர்.கே.நகரில் தினகரனை எளிதாக தோற்கடிப்பேன் என்று ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதுசூதனன் தெரிவித்துள்ளார்.
“தீபாவுக்கு ஓ.பி.எஸ். அணிக்கு கல்தா
ஆர்.கே.நகர் வேட்பாளராகிறார் மதுசூதனன்”
என்ற தலைப்பில் நமது NEWS FAST தளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம்… இக்கட்டுரை வெளியான சிறிது நேரத்திலேயே ஓ.பி.எஸ். அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன் ஆர்.கே. நகரில் 50 ஆண்டு காலமாக வசித்து வரும் நான், டிடிவி தினகரனை எளிதில் தோற்கடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
4 முனைப் போட்டி கண்டுள்ள ஆர்.கே. நகர் யாரை வாழ்த்தப் போகிறது? யாரை வீழ்த்தப் போகிறது? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்…..