என் வீட்டை சுத்தி கொலைகாரனுங்க! வீட்டுக்கு போகவே பயமா இருக்குது: அலறும் அமைச்சர்

Vishnu Priya   | Asianet News
Published : Feb 11, 2020, 08:11 PM IST
என் வீட்டை சுத்தி கொலைகாரனுங்க! வீட்டுக்கு போகவே பயமா இருக்குது:  அலறும் அமைச்சர்

சுருக்கம்

சமீபத்தில் விழுப்புரத்தில் பட்டப்பகலில் நடந்த பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். என் வீட்டின் அருகே கொலை குற்றவாளிகள் இருப்பதைக் கண்டால், வீட்டிற்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

*    தமிழகத்தில் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. அரசின் ஊழலை, கொலை, கொள்ளைகளை சட்டசபை தேர்தலின் போது மக்களிடம் எடுத்துச் சொல்வோம். ஆன்மிகம், இந்து என்றெல்லாம் சொல்லி, தி.மு.க.வை வீழ்த்த சிலர் திட்டமிட்டுள்ளனர். அது நடக்காது. 
-    மு.க.ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*    நடிகர் விஜய் தன் படங்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக காட்சிகள், வசனங்கள் வைப்பதால்தான் அவர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது. ஆனால், குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவாக ரஜினி பேசியதும் அவருக்கு விதிக்கப்பட்ட அபராதம் தள்ளுபடியாகிறது. சிம்பிள். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங் தலைவர்)

*    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு முயற்சித்து வருகிறது. இதுதான் அரசின் கொள்கை. மதுவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவிடுகிறது இந்த அரசு. 
-    தங்கமணி (மின்சார துறை அமைச்சர்)

*    குஜராத்தில் நடந்த கலவரத்தின் போது ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். உ.பி.யில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பலர் கொல்லப்பட்டனர். அப்போதெல்லாம் சும்மா இருந்த நடிகர் ரஜினி, இப்போது குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். கஷ்டம். 
-     பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

*    மேற்கு தொடர்ச்சி மலைகளை பாதுகாக்க மத்தியரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்னென்ன? அறிஞர்கள் குழுவின் பரிந்துரைகளின் படி, திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதை அறிய விரும்புகிறேன். 
-    வைகோ (ம.தி.மு.க. பொதுசெயலாளர்)

*    அரசியல் விஷயங்களெல்லாம் என்னிடம் கேட்காதீங்க. அமைச்சர் ஜெயக்குமார் தவிர ஆளாளுக்கு ஒண்ணு சொல்லக்கூடாதுன்னு முதல்வர் இ.பி.எஸ். உத்தரவு போட்டிருக்கிறார். ஊருக்கு தண்ணீர், தெருவிளக்கு, சாலை வேண்டுமென்றால் என்னிடம் கேட்கலாம். 
-    திண்டுக்கல் சீனிவாசன் (வனத்துறை அமைச்சர்)

*    தமிழகத்தில் தி.மு.க. முடிவினை நோக்கிச் செல்கிறது. அதனால்தான் துணைக்கு ஆள் சேர்க்கின்றனர். சி.ஏ.ஏ. விஷயத்தில் நடிகர் ரஜினி உண்மையை கூறியுள்ளார். உண்மையை சொன்னால் இந்து பயங்கரவாதி என்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு காலம் வரும். 
-    பொன்னார் (மாஜி மத்தியமைச்சர்)

*    சமீபத்தில் விழுப்புரத்தில் பட்டப்பகலில் நடந்த பெட்ரோல் பங்க் மேலாளர் கொலை சம்பவத்தால் பொதுமக்கள் பயத்தில் உள்ளனர். என் வீட்டின் அருகே கொலை குற்றவாளிகள் இருப்பதைக் கண்டால், வீட்டிற்கு செல்லவே எனக்கு அச்சமாக உள்ளது. போலீஸ் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?
-    சி.வி.சண்முகம் (சட்டத்துறை அமைச்சர்)

*    தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் நடிகர் ரஜினிகாந்த், மோடி மற்றும் அமித்ஷாவின் குரல் போல் பேசுகிறார். மதத்தின் பெயரால் தேச மக்களை பிரிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதற்கு ரஜினிகாந்த் துணை போகிறார். 
-    நாராயணசாமி (புதுவை முதல்வர்)

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!