டிவி பார்ப்பதை இந்துக்கள் நிறுத்துங்கள்... ஆன்லைன் நியூஸ் படிங்க... நித்தியானந்தா அட்வைஸ்..!

By vinoth kumarFirst Published Jul 12, 2020, 7:42 PM IST
Highlights

இந்துக்கள் அனைவரும் டி.வி. பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். செல்போன் போதும், சோசியல் மீடியா போதும். இப்படி இருந்தால் நீங்கள் நேர்மையோடு வாழலாம். யாரும் உங்களை வஞ்சிக்க முடியாது என நித்தியானந்தா கூறியுள்ளார். 

இந்துக்கள் அனைவரும் டி.வி. பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். செல்போன் போதும், சோசியல் மீடியா போதும். இப்படி இருந்தால் நீங்கள் நேர்மையோடு வாழலாம். யாரும் உங்களை வஞ்சிக்க முடியாது என நித்தியானந்தா கூறியுள்ளார். 

எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் யாருடை தலையீடு இல்லாமல் உண்மையை உருக்க சொல்வது மாரிதாஸ் மற்றும் சாணக்கியா டி.வி.க்கள் மட்டுமே. நான் பல செய்தியாளர்களை சந்தித்துள்ளேன். ஆயிரக்கணக்கான செய்தியாளர்களை சந்தித்திருக்கின்றேன். பல செய்தியாளர்களை ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் அல்ல மணி கணக்காக சந்தித்திருக்கின்றேன். ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் சொல்லி இருக்கின்றேன். 

உங்களுக்கு தேவையான தகவல்கள் யாருடைய தலையீடு இல்லாமல் நேர்மையே வடிவான சாணக்கியா டிவியில் தெரிந்து கொள்ளலாம். அல்லது மாரிதாஸ் போன்றவர்கள் நேர்மையாக கொடுக்கின்றனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்து டிவி சேனல்கள் ஆரம்பித்து அதை மறு ஒளிப்பரப்பு மற்றும் டிடிஎச் போன்றவற்றை ஆரம்பிச்சு அவற்றை வைத்துகொண்டு தனக்கு தேவையான தகவல்களையும் மட்டும் மக்கள் தலையில் திணித்து அவனை 24 மணிநேரமும் பொழுது போக்கு என்ற பெயரில் வாழ்க்கை போக்கை செய்ய வைத்து அழித்தது எல்லாம் முடிந்து போச்சு.

சாணக்கியா மற்றும் மாரிதாஸ் போன்றவர்கள் வந்துவிட்டார்கள். யார் உங்கள் மீது மிகுந்த தாக்கத்தை செலுத்துகிறார்கள். கட் அவுட்டு காலத்துக்கு எல்லாம் கேட் அவுட் சொல்லுங்கய்யா. தெளிவாக சிந்திக்க துவங்குங்கள். வாழ்கையின் நோக்கையும், போக்கையும். எல்லா துறைகளிலும் எப்படி டெமாக்ரசி வந்ததோ. அதேபோன்று தகவல் தொழில்துறையிலும் டெமாக்ரசி தான் சோசியல் மீடியா. 

யாரு வேண்மானாலும் செல்போனில் தங்களுடைய கருத்தை சொல்ல முடியும். கேட்டு கொள்ள முடியும். செல்போன் போதுங்கய்யா. வாழ்க்கை நடத்துவதற்கு. டிவி தொலைச்சுடுங்க. வாழ்க்கையில் பெரிய நிம்மதியுடன் இருக்கலாம். செல்போன்ல நியூஸ் பார்த்தீங்கன உங்களுக்கு தேவையானது மட்டும் பார்த்துகொள்ளலாம். உங்கள் மீது எவற்றையும் திணிக்க முடியாது.  இந்துக்கள் அனைவரும் டி.வி. பார்ப்பதை நிறுத்திவிடுங்கள். செல்போன் போதும், சோசியல் மீடியா போதும். இப்படி இருந்தால் நீங்கள் நேர்மையோடு வாழலாம். யாரும் உங்களை வஞ்சிக்க முடியாது. 

எளிமையான, இனிமையான உணவு பாடியை டீடாக்ஸ் பண்ணும். டிவி சீரியலை துளைப்பது மனதை டீடாக்ஸ் பண்ணும். டிவி பெட்டியை தூக்கி உடைப்பதன் மூலமாக. அடுப்பை உடைத்தால் உடம்பு டீடாக்ஸ் ஆகும். டிவியை உடைச்சா மனசு டீடாக்ஸ் ஆகும். அடுப்புக்கும், டிவிக்கும் விடைகொடுத்துவிடுங்கள். விடை கொடுக்க முடியாதவர்கள் அதை உபயோகிக்கும் நேரத்தையாவது குறைத்து கொள்ளுங்கள் என்று நித்தியானந்தா அட்வைஸ் செய்துள்ளார். 

click me!