தூத்துக்குடியில் வ.கவுதமனை வாபஸ் பெற வைத்த தமிழிசை..!

By Thiraviaraj RMFirst Published Mar 28, 2019, 3:17 PM IST
Highlights

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.

தூத்துக்குடி மக்களவை தேர்தலில் அண்மையில் புதிதாக தமிழ் பேரரசு கட்சி என்ற அரசியல் அமைப்பை தொடங்கிய இயக்குநர் கவுதமனும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். நேற்று முன் தினத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வது ஓய்வடைந்தது. இந்த நிலையில் திடீரென தான் தாக்கல் செய்த வேட்புமனுவை இயக்குநர் கவுதமன் திடீரென இன்று வாபஸ் பெற்றார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்., ‘’ஏப்ரல் 18-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெறவுள்ளது தேர்தல் அல்ல. ஜனநாயக படுகொலை. அரசு பெட்ரோலிய நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார் தமிழிசை. ஆனால் இதை மறைத்து தமிழிசை தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் பெற்றுள்ளனர். எனவே எனது வேட்புமனுவை வாபஸ் பெறுகிறேன் என்றார் கவுதமன்.

click me!