குட் நியூஸ்… ஆவினில் ஆட்டுப்பாலும் விற்கப்படும்… சர்ப்ரைஸ் தந்த அமைச்சர்…

By manimegalai aFirst Published Oct 16, 2021, 8:11 PM IST
Highlights

ஆவினில் இனி  ஆட்டுப்பாலும் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறி உள்ளார்.

சென்னை: ஆவினில் இனி  ஆட்டுப்பாலும் விற்பனை செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறி உள்ளார்.

ஆவடி To திருப்பதிக்கு சிறப்பு பேருந்து சேவையை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆவின்பாலை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவினில் நாட்டு மாட்டு பால் விற்பது குறித்து மக்கள் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சர் பார்வைக்கு கொண்டு செல்லப்படும்.

நாட்டு மாட்டு பாலை தனியாக பாக்கெட் போட்டு விற்க வேண்டும் என்றால் அதன் விலை அதிகமாகும். மாட்டு பால் போன்று ஆட்டு பாலும் ஆவினில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

click me!