
“எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே “..பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்த கங்கைஅமரன் ...!!
இசையமைப்பாளர் கங்கை அமரன் :
இசையமைப்பாளர் கங்கை அமரன் , தன்னை மிரட்டி தனக்கு சொந்தமான பண்ணை வீட்டை, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் , சசிகலா தரப்பினர் வாங்கியதாக சென்ற வாரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி....
இந்த விவரம் குறித்து தற்போது, தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த இசையமைப்பாளர் கங்கை அமரன் , “எத்தனை காலம் தான் ஏமாற்றுப்வாய்இந்த நாட்டிலே “ என பாட்டுப்பாடி அதிரடி எதிர்ப்பு தெரிவித்தார் . அப்போது தோடர்ந்து பேசிய அவர், அந்த சொத்து குறித்து பல விவரங்களை விவரிவித்தார்.
பாட்டன் காலத்திலேயே வாங்கினேன் :
தான் திரைத் துறைக்கு வந்து சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தில், ஆரம்பத்தில் 3 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் பின்னர், மெல்ல மெல்ல மற்ற நிலங்களையும் சேர்த்து சுமார் 27 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் தெரிவித்தார்.
ஊர் பொதுமக்கள் என்ன சொன்னார்கள் :
ஊர் பொதுமக்கள் , அப்பகுதியில் திருவிழா நடக்கும் போது மட்டும் இடம் கொடுத்தால் போதும் என தெரிவித்ததாகவும்மேலும், அன்றொரு மாலையில் திடீரென அந்த பங்களாவுக்கு ஒரு கார் வந்ததாகவும், அடுத்த நாளே சசிகலா தரப்பிலிருந்து, ஒரு கார் அனுப்பி, கங்கை அமரனுக்கு பொக்கே கொடுத்து , அதே போயஸ் கார்டனுக்கு அழைத்து சென்றதாகவும், தெரிவித்தார்.
சொற்ப பணம் கொடுத்து கையெழுத்து
போயஸ் கார்டனில், சொற்ப பணம் கொடுத்து தன்னிடமிருந்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக வும் கூறினார்.
டீலிங் பேசினது யார் ?
சசிகலா மூலமாகத்தான் சிலர் தன்னிடம் பேசியதாகவும், திவாகரனா இல்ல தினகரனா ? அவர் பெயர் கூட சரியா ஞாபகம் இல்லை. அவர் தான் எண்ணுடன் டீலிங் பேசினார், பணத்தை கொடுத்தார் . பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார் என இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்தார்.