பிரதமரிடம் ஓபிஎஸ் பேசவே இல்லை, தெரியுமா.? அடித்து சொல்லும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் !!

By Raghupati RFirst Published Nov 12, 2022, 9:37 PM IST
Highlights

பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். எடப்பாடியை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது என்று விளக்கம் அளித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பெங்களூரில் இருந்து நேற்று தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

பிரதமர் மோடி சந்திப்பு:

மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமியும்,  அவருடன்  முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் ,உதயகுமார், நத்தம் சீனிவாசன், ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்டோர் வந்திருந்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் ரவீந்திரநாத் எம்பி, தர்மர் எம்பி ,மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் வந்திருந்தனர்.

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

எடப்பாடி Vs ஓபிஎஸ்:

ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.மூர்த்தியும்,  மற்றும் பாஜகவினர் அதிகாரிகள் உட்பட 42 பேர் பிரதமரை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.  பிறகு பிரதமர் மோடி பன்னீர் செல்வத்திடமும் பழனிச்சாமியிடமும் ஒரே நேரத்தில் பூங்கொத்தை வாங்கினார் என்று கூறப்படுகிறது.  இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

எடப்பாடி பழனிசாமி:

செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்று மதுரை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி சென்றார். எடப்பாடியை பார்த்ததும் பிரதமரின் முகத்திலே மலர்ச்சி தெரிந்தது. எடப்பாடியிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி. அதற்கு நலம் என்று பதில் அளித்தார் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி பழனிச்சாமியை தவிர வேறிடமும் யாரிடமும் பிரதமர் பேசவில்லை.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

ஓ.பன்னீர்செல்வம்:

விமான நிலையத்தில் பிரதமர் பேசிய ஒருவர் எடப்பாடி பழனிசாமி தான். இது அதிமுகவுக்கு கிடைத்த அங்கீகாரம். பிரதமர் நலம் விசாரித்தது அதிமுகவுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் அருகருகே இருந்தாலும் பேசிக் கொள்ளவே இல்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

click me!