பாஜகவின் பொய்ப் பிரசாரத்தை அம்பலப்படுத்துங்கள்.. கட்சிக் கூட்டத்தில் புலம்பிய சோனியா காந்தி.!

By Asianet TamilFirst Published Oct 26, 2021, 9:31 PM IST
Highlights

பாஜக, ஆர்எஸ்எஸ்ஸின் கொடூரமான பொய் பிரசாரத்தை  அம்பலப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி கூறியுள்ளார்.
 

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார். கூட்டத்தில் அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள பஞ்சாப், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் நிலவரங்கள் குறித்து ஆலோசிகப்பட்டது. மேலும் தேசிய விவகாரங்கள், கட்சியைப் பலப்படுத்துவது, உறுப்பினர் சேர்க்கை, போராட்டத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. 


கூட்டத்தில் சோனியாகாந்தி பேசுகையில், “பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கொடூரமான பொய் பிரசாரங்கங்களை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு எதிராக கொள்கை ரீதியில் போராட வேண்டும். இப்போராட்டத்தில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், அவர்களின் பொய் பிரசாரத்தை மக்கள் முன் அம்பலப்படுத்த வேண்டும். நாடு சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் மேலிடம் அறிக்கை வெளியிட்டு வருகிறது. ஆனால், அந்த அறிக்கைகள் மாவட்டம் மற்றும் தொகுதிகளுக்கு சென்றடைவதில்லை. இதை அனுபவ ரீதியாக உணர்ந்துள்ளேன்.


 நம்முடைய கொள்கை ரீதியாக சிக்கல்களும் உள்ளன. நமது மாநில அளவிலான தலைவர்கள் இடையே ஒற்றுமை இல்லாததையும் புரிந்து வைத்திருக்கிறேன். கட்டுப்பாடும், ஒற்றுமையும்தான் இந்நேரத்தில் மிக முக்கியம். இதைத்தான் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். கட்சியைப் பலப்படுத்துவதுதான்  நம்முடைய முக்கியமான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதெல்லாம் ஒவ்வொருடைய தனிப்பட்ட லட்சியங்களை மீறினால் மட்டுமே நடக்கும். இதன் அடிப்படையில்தான் கூட்டு வெற்றியும் கிடைக்கும்.” என்று சோனியா காந்தி பேசினார். 
 

click me!