அசாமில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக..! அடித்துக்கூறும் தேர்தலுக்கு பிந்தைய சர்வே முடிவுகள்

By karthikeyan VFirst Published Apr 29, 2021, 8:16 PM IST
Highlights

அசாமில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
 

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் வரும் மே 2ம் தேதி எண்ணப்படுகின்றன. 

மேற்குவங்கத்தில் கடைசிக்கட்ட(8ம் கட்ட) வாக்குப்பதிவு இன்று முடிந்த நிலையில், தேர்தல் நடந்த 5 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சிகள் ஆட்சியமைக்கும் என்று நடத்தப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடிக்கும் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

126 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அசாமில் 79 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று ரிபப்ளிக் - சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய சர்வே தெரிவிக்கிறது. காங்கிரஸ் 45 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 1-3 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாகவும் சி.என்.எக்ஸ் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ்  நடத்திய தேர்தலுக்கு பிந்தைய சர்வேயில், பாஜக 65 தொகுதிகளில் வென்று ஆட்சியமைக்கும் என்றும், காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்  தெரிவிக்கின்றன.

பாஜக ஆட்சியில் இருந்த அசாம் மாநிலத்தில், பாஜக கண்டிப்பாக ஆட்சியை தக்கவைக்கும் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் தெரிவிக்கின்றன.
 

click me!