தூங்கினால் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டு தூங்கிய அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உயிரிழப்பு... ஓபிஎஸ், இபிஎஸ் இரங்கல்..!

By vinoth kumarFirst Published Jan 4, 2020, 12:20 PM IST
Highlights

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் சக்திவேல் முருகனுக்கு இருதய பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் பின் ஒய்வில் இருந்து வந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் ஏற்பட்டு நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தவர், வீடு திரும்பினார். தூங்கினால் சரியாகிவிடும் என்று சொல்லி விட்டு இரவு தூங்கியிருக்கிறார். 

நெல்லை மாவட்டம் அம்பை சட்டமன்ற தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சக்திவேல் முருகன் நேற்று மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார். 

நெல்லை அடுத்த அடையக்கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்முருகன் (60). அதிமுகவைச் சேர்ந்த இவர் நெல்லை புறநகர் மாவட்ட அதிமுக அண்ணா தொழிற்சங்க செயலாளராக இருந்தார். இவர் அம்பை சட்டமன்ற தொகுதியில் கடந்த 2001 முதல்-2006 வரை அதிமுக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்தார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் சக்திவேல் முருகனுக்கு இருதய பை பாஸ் அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. அதன் பின் ஒய்வில் இருந்து வந்தார். இதனிடையே, நேற்று முன்தினம் இரவு காய்ச்சல் ஏற்பட்டு நெல்லையிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தவர், வீடு திரும்பினார். தூங்கினால் சரியாகிவிடும் என்று சொல்லி விட்டு இரவு தூங்கியிருக்கிறார். 

இந்நிலையில், நேற்று காலை வீட்டில் இருந்த போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து சக்திவேல் முருகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  மரணமடைந்த சக்திவேல் முருகனின் மனைவி முத்துலட்சுமி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மகன் மகாகிருஷ்ணன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். மறைந்த முன்னாள் எம்எல்ஏ  சக்திவேல் முருகனின்  உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 

click me!