சென்னை ராயபெட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், முதல்வர் எடப்பாடி தலைமயிலான எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், 109 எம்எல்ஏக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.தினகரன் ஆதரவு எம்எல் ஏக்கள் 21 பேர், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் 3 பேர், சபாநாயகர் மற்றும் தமிழ்ச்செல்வன் தவிர்த்து மற்ற எம்எல் ஏக்களான 109 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்கூட்டத்தில் பங்கேற்ற 109 எம்எல்ஏக்கள் அனைவரும் ஒருமனதாக முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அதன்படி,எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து முதல்வராக செயல்படவும்,முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதி முடிவு என அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தங்களுடன் இணைந்து பணியாற்ற எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார்.ஒருவேளை இணைந்து பணியாற்ற வரவில்லை என்றால்,"உங்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" எனவும் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.இதன் காரணமாக தமிழக அரசியலில் தொடர்ந்து ஒரு பரபரப்பு காணப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது