இன்னும் 37 நாட்களில் தமிழகத்தில் தேர்தல்... இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published Mar 10, 2019, 5:51 PM IST
Highlights

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே மாதம் 18 ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணியம் அறிவித்துள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மே மாதம் 18 ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணியம் அறிவித்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல்-  மே மாதங்களில்  7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஜூன், 3ஆம் தேதியுடன், தற்போதைய மக்களவை உறுப்பினர்களில் பதவிக் காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 17 வது மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. டெல்லியில் உள்ள விக்யான் பவனில் செய்தியாளர்கள் முன்னிலையில், இந்திய தேர்தல் ஆணையர்களான சுனில் அரோரா, அசோக் லவாசா சுஷில் ஆகியோர் அறிவித்தனர். 

அதன்படி ‘’ வரும் மே மாதம் தேதி நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டத்தேர்தல் ஏப்ரல் 11, இரண்டாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 18 , மூன்றாம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 23 , 4 கட்ட தேர்தல் ஏப்ரல்- 29, 5 கட்ட தேர்தல் மே- 6ம் தேதியும்  7ம் கட்டத்தேர்தல் கட்ட தேர்தல்  மே-12 ம் தேதியும் நடைபெற உள்ளது.  வேட்பு மனு தாக்கல் மார்ச் 18 ம்தேதி தொடங்குகிறது.

அதன்படி ஏப்ரல் 18, மூன்றாம் கட்டத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு அளிக்க கட்சி நாள் மார்ச் 26. தேர்தல் எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெற உள்ளது. 

click me!