இன்றாவது தீர்ப்பு சொல்லுமா தேர்தல் ஆணையம் !! இழுபறியில் இரட்டை இலை சின்னம்!!!

Asianet News Tamil  
Published : Nov 08, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
இன்றாவது தீர்ப்பு சொல்லுமா தேர்தல் ஆணையம் !! இழுபறியில் இரட்டை இலை சின்னம்!!!

சுருக்கம்

election commission enquiry about two leaves

இரட்டை லை சின்னம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கு விசாரணையில், டி.டி.வி.தினகரன் தரப்பு  வாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்று 7 ஆவது கட்ட விசாரணை நடைபெறவுள்ளது.

அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் மிக முக்கிய விவகாரமாக, இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்ற கேள்வி, அக்கட்சியின்  மூத்த தலைவர்களில் தொடங்கி  அடிமட்டத்  தொண்டர்கள் வரையில் பரபரத்துக் கிடக்கிறது. இதுதொடர்பாக, டெல்லி தேர்தல் ஆணையத்தில், விசாரணை நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு முறையும், சசிகலா மற்றும் தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள், பல்வேறு விபரங்களைக் கூறி, விசாரணை நேரம் முழுவதையும் ஆக்கிரமித்தனர். தினகரன் தரப்பு வழக்கறிஞர், விஜய் ஹன்சாரியா, தன் வாதங்களை நிறைவு செய்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன் தினமும் தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற  வழக்கு விசாரணையிலும், நேரமாகிவிட்டதாக கூறி, தேர்தல் அதிகாரிகள் இன்று விசாரணையை ஒத்தி வைத்துள்ளனர்.

இதையடுத்து, இன்று மாலை, 4:00 மணிக்கு, 7 ஆவது கட்டமாக மீண்டும் விசாரணை நடக்கவுள்ளது. நவம்பர் 10 ஆம் தேதிக்குள் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்றாவது விசாரணையை ஒத்தி வைக்காமல் தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

 

PREV
click me!

Recommended Stories

மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?! திருவிழா கோலத்தில் நீலாங்கரை.!!!
TVK Vijay : 100 கோடி சொத்தை மறைத்து முறைகேடு செய்த தவெக விஜய் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!